Wednesday, August 24, 2011

பாதி காதல் பாதி முத்தம்...


படம்: மோதி விளையாடு
இசை: ஹரிஹரன், லெஸ்லி
பாடியவர்கள்: Bombay ஜெயஸ்ரீ, சுனிதா சாரதி
வரிகள்:

பாதி காதல் பாதி முத்தம்
போதாது போதாது போடா... ஓ...
மீதி முத்தம் கேட்டு கேட்டு
மேலாடை தீமூட்டும் வாடா
என் பெண்மை... எரியுதடா...
(பாதி காதல்...)

உதட்டில் எனை மூட்டி
உயிர் உருக செய்த மன்மதா...
உச்சம் வரும் பொழுது
உனை உதறி கொள்வதா!


மோசமான கனவு ஒன்று
மீண்டும் மீண்டும் மீண்டும் தோன்றும். ஹோ....
நான் ஆணின் தேகம் ஆள்வதாக
வெட்க கனவு வெள்ளை கோடு தாண்டும்...
என் வயது... வலிக்குதடா...

பறக்கும் முத்தம் கொடுத்து
எனை பறக்க சொல்லும் மன்மதா...
விருந்தே உன்னை அழைக்க
பசி விலகி செல்வதா!


காதல் என்னை... காதல் செய்ய...
பாதுகாப்பு வளையம் தளர்த்தினேன்...
பூனை போல... உள்ளே வந்தாய்...
பானை இருக்கும் திசையை காட்டினேன்...
பயந்து கொண்டே... இதழ் குடித்தாய்...
பாதியிலே விட்டு பாய் மேல் சென்றாய்

மோசமான கனவு ஒன்று
மீண்டும் மீண்டும் மீண்டும் தோன்றும்
ஹோ தோன்றும் ஹோ தோன்றும்


ரோஜா பூவின் வாசம் எல்லாம்
எந்தன் இதழில் அதிகம் உள்ளதோ
ஹோ பெண்மை காணும் இன்பம் எல்லாம்
எந்தன் உடலில் எங்கு உள்ளதோ
வாச்த்சாயணம் படித்தவனே
வாரி கொடுத்தால் சுவர்க்கம் காண்பேன் நானே

(பாதி காதல்...)
(உதட்டில் எனை...)

உயிரை தொலைத்தேன்....


படம்: காதல் வேண்டும்
இசை: ஜெய்
பாடியவர்கள்: திலீப் வர்மன்
வரிகள்:

உயிரை தொலைத்தேன்...
அது உன்னில்தானோ...
இது நான் காணும் கனவோ நிஜமோ...
மீண்டும் உன்னை காணும் வரமே...
வேண்டும் எனக்கே மனமே மனமே...
விழியில் விழுந்தால்... ஆஆஆஆஆ..
என்னில் எனதாய் நானே இல்லை
எண்ணம் முழுதும் நீதானே என் கண்ணே..
(உயிரை...)

அன்பே உயிராய் தொடுவேன் உன்னை..
தாலாட்டுதே பார்வைகள்..
(அன்பே...)

உனை சேரும் நாளை...
தினம் ஏங்கினேனே...
நானிங்கு தனியாக அழுதேன்...
விடியும் வரை...
கனவின் நிலை...
உனதாய் இங்கு...
தினம் ஏங்குது...
மனம் உருகிடும்...
நிலை இது...
எந்தன் முதல் முதல் வரும்...
உயிர் காதலில்...
(உயிரை...)


நினைத்தால் இனிக்கும் இளமை நதியே...
உன்னோடு நான் மூழ்கினேன்...
(நினைத்தால்...)

தேடாத நிலையில்...
நோகாத வழியில்...
கண் பார்க்கும் இடம் எங்கும் நீதான்...
(விடியும்...)
(உயிரை...)