படம்: மோதி விளையாடு
இசை: ஹரிஹரன், லெஸ்லி
பாடியவர்கள்: Bombay ஜெயஸ்ரீ, சுனிதா சாரதி
வரிகள்:
பாதி காதல் பாதி முத்தம்
போதாது போதாது போடா... ஓ...
மீதி முத்தம் கேட்டு கேட்டு
மேலாடை தீமூட்டும் வாடா
என் பெண்மை... எரியுதடா...
(பாதி காதல்...)
உதட்டில் எனை மூட்டி
உயிர் உருக செய்த மன்மதா...
உச்சம் வரும் பொழுது
உனை உதறி கொள்வதா!
மோசமான கனவு ஒன்று
மீண்டும் மீண்டும் மீண்டும் தோன்றும். ஹோ....
நான் ஆணின் தேகம் ஆள்வதாக
வெட்க கனவு வெள்ளை கோடு தாண்டும்...
என் வயது... வலிக்குதடா...
பறக்கும் முத்தம் கொடுத்து
எனை பறக்க சொல்லும் மன்மதா...
விருந்தே உன்னை அழைக்க
பசி விலகி செல்வதா!
காதல் என்னை... காதல் செய்ய...
பாதுகாப்பு வளையம் தளர்த்தினேன்...
பூனை போல... உள்ளே வந்தாய்...
பானை இருக்கும் திசையை காட்டினேன்...
பயந்து கொண்டே... இதழ் குடித்தாய்...
பாதியிலே விட்டு பாய் மேல் சென்றாய்
மோசமான கனவு ஒன்று
மீண்டும் மீண்டும் மீண்டும் தோன்றும்
ஹோ தோன்றும் ஹோ தோன்றும்
ரோஜா பூவின் வாசம் எல்லாம்
எந்தன் இதழில் அதிகம் உள்ளதோ
ஹோ பெண்மை காணும் இன்பம் எல்லாம்
எந்தன் உடலில் எங்கு உள்ளதோ
வாச்த்சாயணம் படித்தவனே
வாரி கொடுத்தால் சுவர்க்கம் காண்பேன் நானே
(பாதி காதல்...)
(உதட்டில் எனை...)