Tuesday, May 16, 2023

கற்றவர்க்கும், நலம் நிறைந்த கன்னியர்க்கும், வண்மை கை உற்றவர்க்கும், வீரர் என்று உயர்ந்தவர்க்கும், வாழ்வுடைக் கொற்றவர்க்கும், உண்மையான கோது இல் ஞான சரிதராம் நற்றவர்க்கும், ஒன்று சாதி; நன்மை தீமை இல்லையால் படித்தவர்களுக்கும், அழகுநிறைந்த கன்னிகைகளுக்கும், ஈகைக்குணம் கைவந்தவர்களுக்கும், வீரர்களென்று சிறப்பாக மதிக்கப்பட்டவர்களுக்கும், செல்வவாழ்க்கையையுடைய அரசாட்சி பூண்டவர்களுக்கும், உண்மையானகுற்றமற்ற தத்துவ ஞானத்தையும், ஒழுக்கத்தையும் உடையவர்களாகிய நல்ல தவஞ்செய்யும் முனிவர்களுக்கும், சாதி ஒன்றே; நன்மை தீமை இல்லை; உயர்வு தாழ்வு என்னும் பகுப்பு இல்லை

Saturday, August 21, 2021


இறுவெட்டு: குருத்து வலி
இசை: வசீகரன்
பாடியவர்கள்: நித்தியஸ்ரீ மகாதேவன்
வரிகள்: வசீகரன்

தாய் மண்ணை முத்தமிட வேண்டும்
தமிழ் மண்ணை சுற்றிவர வேண்டும் (2)

தாய் நாட்டை பிரிந்து வாழ்கின்ற எமக்கு
நெருப்பாய் நினைவுகள் சுடுகின்றது
நெடு நாள் ஆசைகள் ஆயிரம் நெஞ்சில்
வலியாய் வெளியே விழுகின்றது (2)

எங்கள் வயல்வெளி எங்கும் காலாற நடந்தால்
இதயம் மகிழ்ந்துவிடும் (2)

காதோரம் வந்து கன்னத்தைத் தழுவி (2)
காற்றும் முத்தமிடும் - இளம்
காற்றும் முத்தமிடும்
காதோரம் வந்து கன்னத்தைத் தழுவி
காற்றும் முத்தமிடும் - இளம்
காற்றும் முத்தமிடும்

துன்பத்தை தாங்கி வாழ்கின்ற வழியை (2)
பனைமரக் காடுகள் கற்றுத்தரும்
பனைமரக் காடுகள் கற்றுத்தரும் - எங்கள்
பனைமரக் காடுகள் கற்றுத்தரும்

தாய் மண்ணை முத்தமிட வேண்டும்
தமிழ் மண்ணை சுற்றிவர வேண்டும்


வானிலே பறந்துவரும் பறவைக்கு உலகம்
தடை ஏதும் விதிப்பதில்லை
நாடிழந்த மனிதன் பூமியில் வாழ
எத்தனை தடைகள் அடி (2)
நாடிழந்த மனிதன் பூமியில் வாழ
எத்தனை தடைகள் அடி

சிறகொடிந்த பறவை போல் நாடிழந்த மனிதனும்
உலகத்தில் அகதியடி (2)

மொழி இழந்த மனிதனும் குரல் இழந்த பறவையும்
உலகத்தில் சுழியம் அடி (2)
உலகத்தில் சுழியம் அடி (2)
கால காலமாக நாங்கள்
வாழ்ந்திருந்த தேசம்
கண்ணீர்க் கடலில் மூழ்கி மாண்டு போவதோ (2)

பண்டார வன்னியன் படை நடந்த தேசம்
குருதிக் கடலில் மூழ்கி மாண்டு போவதோ (2)

தேசியத் தலைவனின் படை நடந்த தேசம் (3)
பாதகத்தால் வெந்தழிந்து சாய்வதோ
துரோகத்தாலே கறை படிந்து வீழ்வதோ
பெற்ற தாய் தந்தையை இழந்துவிட்ட பிள்ளைகள்
எத்தனை ஆயிரம் எங்கள் மண்ணிலே
எத்தனை ஆயிரம் எங்கள் மண்ணிலே
கால நதி எங்குமே விழிகளில் கங்கையே
காயங்கள் ஆற மருந்தில்லையே
காயங்கள் ஆற மருந்தில்லையே - எங்கள்
காயங்கள் ஆற மருந்தில்லையே


தாய் மண்ணை முத்தமிட வேண்டும் வேண்டும்
தமிழ் மண்ணை சுற்றிவர வேண்டும் வேண்டும் (2)
தாய் நாட்டை பிரிந்து வாழ்வது கொடுமை
தாய் நாட்டில் வாழ்ந்து சாவதில் பெருமை
தாய் நாட்டில் வாழ்ந்து சாவதில் பெருமை

தோழர்கள் தோழியர் குருதியில் குளித்த மண்ணை (2)
கோடிமுறை வணங்கிட வேண்டும் (2)
கோடிமுறை வணங்கிட வேண்டும் - நாங்கள்
கோடிமுறை வணங்கிட வேண்டும் (2)

தாய் மண்ணை முத்தமிட வேண்டும் வேண்டும்

Tuesday, July 3, 2018

ஆதியாய் அனாதியாய்...


இறுவெட்டு: பரணி பாடுவோம்
இசை:
பாடியவர்கள்: SG சாந்தன்
வரிகள்:

ஆதியாய் அனாதியாய்
அவதரித்த செந்தமிழ் (2)
அன்புக்கு விளக்கேற்றி
ஆறம் காத்ததெங்கள் தமிழ் (2)
ஆதியாய் அனாதியாய்
அவதரித்த செந்தமிழ்

மேதினியில் வீரமதால்
மேன்மை கொண்டதெங்கள் தமிழ் (2)
மேலான தத்துவத்தின்
பொருள் சொன்ன ஞானத்தமிழ் (2)
ஆதியாய் அனாதியாய் அவதரித்த செந்தமிழ்

திசை எட்டும் ஒலி கொட்டி
புகளிட்டு உரமிட்ட
செந்தமிழ் எங்கள் தமிழ்

திடமுள்ள நெஞ்சங்கள்
புடமிட்டு வாழ்ந்திட்ட
வேங்கையின் வீரத்தமிழ்

படை கொண்டு வந்தவர்
பகை வென்று விளையாடும்
பைந்தமிழ் நம் செந்தமிழ்

பாவலர் நாவலர்
காவலர் வீரம் அதை
பாடிப் புகழ்ந்திட்ட பைந்தமிழ்

குறுக்கத் தறித்த குறளால் உலகம்
தெளியத் தழைத்த செந்தமிழ்
குமாரி முதலாக இமையம் வரையாக
முடி கொண்டு வாழ்ந்த முத்தமிழ்

அடிமை ஆவதோ
பகைவன் பிடியில் மாள்வதோ
தமிழா ஆண்மை இல்லையோ
உரிமையில் ஆசை இல்லையோ

தூக்குங்கள் துப்பாக்கி
துணிந்து விட்டால் எவன் பாக்கி
தாக்குங்கள் தீமைகளை
தகர்த்திடுங்கள் எதிரிகளை

போக்குங்கள் பயம் தனை
புறப்படுங்கள் போர்க்களம்
போக்குங்கள் பயம் தனை
புறப்படுங்கள் போர்க்களம்
ஆக்குங்கள் தமிழ் ஈழம்
அனுபவிப்போம் சுதந்திம்
ஆக்குங்கள் தமிழ் ஈழம்
அனுபவிப்போம் சுதந்திம்
அனுபவிப்போம் சுதந்திம்
அனுபவிப்போம் சுதந்திம்

Thursday, September 15, 2011

கனவா இல்லை காற்றா...


படம்: ரட்சகன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ்
வரிகள்: வாலி

கனவா இல்லை காற்றா...
கனவா நீ காற்றா...

கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே...
நுரையால் செய்த சிலையா நீ

இப்படி உன்னை ஏந்திக் கொண்டே
இந்திர லோகம் போய் விடவா
இடையில் கொஞ்சம் வலி எடுதாலும்...
சந்திர தரையில் பாய் இடவா

(கையில் மிதக்கும்...)


நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதல்லில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேனடி
அதை கண்டு கொண்டேனடி - (2)

காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது
உன் பளிங்கு முகத்தை பார்த்துக் கொண்டால்
பசியோ வலியோ தெரியாது - (2)

உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரும் தூரம் தெரியாது - (2)
உன்மேல் வந்தொரு பூ விழுந்தால்
என்னால் தாங்க முடியாது

(கையில் மிதக்கும்...)
(கையில் மிதக்கும்...)

கனவா இல்லை காற்றா...
கனவா நீ காற்றா...

Monday, September 12, 2011

பூ வாசம்...


படம்: அன்பே சிவம்
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: சாதனா சர்கம், விஜய் பிரகாஷ்
வரிகள்: வைரமுத்து

பூ வாசம் புறப்படும் பெண்ணே
நான் பூ வரைந்தால்!
தீ வந்து விரல் சுடும் கண்ணே
நான் தீ வரைந்தால்!

உயிர் அல்லதெல்லாம்
உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்?
உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி!


புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்
உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்
கோடு கூட ஓவியத்தின் பாகமே
ஊடல் கூட காதல் என்று ஆகுமே

ஒரு வானம் வரைய நீலம் வண்ணம்
நம் காதல் வரை என்ன வண்ணம்?

உன் வெட்கத்தை விரல்தொட்டு
விரல் என்னும் கோல் கொண்டு
நம் காதல் வரைவோமே வா

(பூ வாசம்...)


ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது?
உற்று பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது
பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது?
ஆண் தொடாத பாகம் தன்னில் உள்ளது

நீ வரைய தெரிந்த ஒரு நவீன கவிஞன்
பெண் வசியம் தெரிந்த ஒரு நலிந்த கவிஞன்
மேகத்தை ஏமாற்றி மண் சேரும் மழை போல
மடியோடு விழுந்தாயே
வா வா............
(பூ வாசம்...)

நீல வானம்...


படம்: மன்மதன் அம்பு
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: கமல் ஹாசன், பிரியா ஹிமேஷ்
வரிகள்: கமல் ஹாசன்

நீல வானம்...
நீயும் நானும்...
கண்களே பாஷையாய்...
கைகளே ஆசையாய்...
வையமே கோயிலாய்...
வானமே வாயிலாய்...
பால்வெளி பாயிலே...
சாயுந்து நாம் கூடுவோம்...

இனி நீ என்று நான் என்று
இரு வேறு ஆள் இல்லையே!

நீல வானம் Blue Sky
நீயும் நானும் You and I


ஏதேதோ தேசங்களை
சேர்க்கின்ற நேசம் தன்னை
நீ பாதி நான் பாதியாய்
கோர்க்கின்ற பாசம் தன்னை
காதல் என்று பெயர் சூட்டியே
காலம் தந்த சொந்தம் இது
என்னை போலே பெண் குழந்தை
உன்னை போல் ஒரு ஆண் குழந்தை

நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றவது
இன்னொரு உயிர்தானடி........
(நீல வானம்...)


பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம் (3)


ஆறாத காயங்களை
ஆற்றும் நாம் நேசம் தன்னை
மாளாத சோகங்களை
மாய்த்திடும் மாயம் தன்னை
செய்யும் விந்தை காதலுக்கு
கை வந்ததொரு கலைதானடி
உன்னை என்னை ஒற்றி ஒற்றி
உயிர் செய்யும் மாயமும் அது தானடி

நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றவது
இன்னொரு உயிர்தானடி......
(நீல வானம்...)

Wednesday, August 24, 2011

பாதி காதல் பாதி முத்தம்...


படம்: மோதி விளையாடு
இசை: ஹரிஹரன், லெஸ்லி
பாடியவர்கள்: Bombay ஜெயஸ்ரீ, சுனிதா சாரதி
வரிகள்:

பாதி காதல் பாதி முத்தம்
போதாது போதாது போடா... ஓ...
மீதி முத்தம் கேட்டு கேட்டு
மேலாடை தீமூட்டும் வாடா
என் பெண்மை... எரியுதடா...
(பாதி காதல்...)

உதட்டில் எனை மூட்டி
உயிர் உருக செய்த மன்மதா...
உச்சம் வரும் பொழுது
உனை உதறி கொள்வதா!


மோசமான கனவு ஒன்று
மீண்டும் மீண்டும் மீண்டும் தோன்றும். ஹோ....
நான் ஆணின் தேகம் ஆள்வதாக
வெட்க கனவு வெள்ளை கோடு தாண்டும்...
என் வயது... வலிக்குதடா...

பறக்கும் முத்தம் கொடுத்து
எனை பறக்க சொல்லும் மன்மதா...
விருந்தே உன்னை அழைக்க
பசி விலகி செல்வதா!


காதல் என்னை... காதல் செய்ய...
பாதுகாப்பு வளையம் தளர்த்தினேன்...
பூனை போல... உள்ளே வந்தாய்...
பானை இருக்கும் திசையை காட்டினேன்...
பயந்து கொண்டே... இதழ் குடித்தாய்...
பாதியிலே விட்டு பாய் மேல் சென்றாய்

மோசமான கனவு ஒன்று
மீண்டும் மீண்டும் மீண்டும் தோன்றும்
ஹோ தோன்றும் ஹோ தோன்றும்


ரோஜா பூவின் வாசம் எல்லாம்
எந்தன் இதழில் அதிகம் உள்ளதோ
ஹோ பெண்மை காணும் இன்பம் எல்லாம்
எந்தன் உடலில் எங்கு உள்ளதோ
வாச்த்சாயணம் படித்தவனே
வாரி கொடுத்தால் சுவர்க்கம் காண்பேன் நானே

(பாதி காதல்...)
(உதட்டில் எனை...)