படம்: வேட்டைக்காரன்
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்:
வரிகள்:
ஒரு சின்னத் தாமரை
என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள்
என் உள்ளம் தேடி தைக்கின்றதே
இதை உண்மை என்பதா
இல்லை பொய்தான் என்பதா
என் தேகம் முழுவதும்
ஒரு வெண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே
என் ரோம கால்களோ
ஒரு பயணம் போகுதே
உன் ஈரப் புன்னகை சுடுதே
என் காட்டு பாதையில்
நீ ஒற்றை பூவடா
உன் வாசம் தாக்கியே மலர்ந்தேன்... உயிரே
(ஒரு சின்னத் தாமரை...)
உன் பெயர் கேட்டாலே
அடி பாறையில் பூ பூக்கும்
உன் காலடி தீண்டிய வார்த்தைகள் எல்லாம்
கவிதைகளாய் மாறும்
உன்தெரு பார்த்தாலே
என் கண்கள் அலை மோதும்
உன் வாசல் தேடி போக சொல்லி
கெஞ்சுது என் பாதம்
என் வாழ்க்கை வரலாற்றில்
எல்லாமே உன் பக்கங்கள்
உன்னாலே என் வீட்டின்
சுவரெல்லாம் ஜன்னல்கள்
(ஒரு சின்னத் தாமரை...)
உன் குரல் கேட்டாலே
அந்த குயில்களுக்கும் கூசும்
நீ மூச்சினில் சுவாசித்த காற்றுகள்
மட்டும் மோட்சத்தினை சேரும்
அனுமதி கேட்காமல்
உன் கண்கள் என்னை மேயும்
நான் இத்தனை நாளாய் எழுப்பிய கோபுரம்
நொடியில் குடை சாயும்
உன் கைகள் கோர்க்காமல்
பயணங்கள் கிடையாது
உன்னோடு வந்தாலே
சாலைகள் முடியாது
(ஒரு சின்னத் தாமரை...)