Sunday, May 30, 2010

பூ மீது யானை...


படம்: டிஷ்யூம்
இசை: விஜய் ஆண்டனி
பாடியவர்கள்: மால்குடி சுபா
வரிகள்:

பூ மீது யானை
பூவலியை தாங்குமோ
தீ மீது வீணை
போய் விழுந்தால் பாடுமோ

போ என்று சொன்னால்
வரும் நினைவும் போகுமோ
போராடும் அன்பில்
அட ஏன்தான் காயமோ

கண்ணீர் கவிதைகள்
இந்தக் கண்கள் எழுதுதே
கவிதை வரிகளால்
எந்தன் கன்னம் நிறையுதே

இலைகள் உதிர்வதால்
கிளையின் சுமைகள் கூடுதே
உதிரும் இலைகளோ
மறந்து காற்றில் போகுதே

(பூ மீது யானை...)


உடைத்துப் பார்க்கும் இதயம் உனது
பதைத்து பார்ப்பதை அறியாதே
குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு
நிஜத்தில் உலகத்தில் உடையாதே... உடையாதே...

உடைத்துப் பார்க்கும் இதயம் உனது
பதைத்து பார்ப்பதை அறியாதே
குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு
நிஜத்தில் உலகத்தில் உடையாதே... உடையாதே...

காதல் போலவே
நோயும் இல்லையே
யாவும் உண்மை தானே

இதை காலம் காலமாய்
பலரும் சொல்லியும்
கேட்கவில்லை நானே

(பூ மீது யானை...)


விலகும்போது நெருங்கும் காதல்
அருகில் போனால் விலகிடுமோ
விலங்கு மாட்டி சிறையில் பூட்டி
விருப்பம்போல் அது வலி தருமோ

விலகும்போது நெருங்கும் காதல்
அருகில் போனால் விலகிடுமோ
விலங்கு மாட்டி சிறையில் பூட்டி
விருப்பம்போல் அது வலி தருமோ

வேறு வேறென
நினைவு போகையில்
காதல் கொள்தல் பாவம்

அது சேரும் வரையிலே
யாரும் துணையில்லே
ஆதி கால சாபம்!

(பூ மீது யானை...)
(பூ மீது யானை...)