Thursday, July 30, 2009

பார்த்தும் கரைந்தேனடா...


படம்: யாதுமாகி
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்கள்: சித்ரா, விஜய் ஜேசுதாஸ்
வரிகள்: ஆண்டாள் பிரியதர்ஷினி

பார்த்தும் கரைந்தேனடா
காதலில் உறைந்தேனடா
காற்றிலே பறந்தேனடா
சட்டென மலர்ந்தேனடா

பார்த்தும் திகைத்தேனே நான்
காதலில் கிளைத்தேனே நான்
மீண்டுமே ஜனித்தேனே நான்
தோற்றுதான் ஜெயிப்பேனே நான்

ஜில் என்று பனிக் காற்று
தொட்டதாய் சிலிர்தேனே
காரணம் புரியாமல்
நான் தினம் சிரித்தேனே

பார்த்தும் திகைத்தேனே நான்
காதலில் கிளைத்தேனே நான்
மீண்டுமே ஜனித்தேனே நான்
தோற்றுதான் ஜெயிப்பேனே நான்


எங்கிருந்தோ வந்து எந்தன் கைகள் பற்றினாய்
உச்சி வேளை வெயில் போல காதல் மூட்டினாய்
இங்கும் அங்கும் எங்கும் உந்தன் விம்பம் பார்கிறேன்
தொட்டுப் பார்த்தால் நீயும் இல்லை கண்கள் வேர்க்கிறேன்

ஞாபகங்கள் தொட்டா மாலை ஆடும்
மாய வலை ஒன்று நம்மை மூடும்

வார்த்தைகள் போதுமடி
வேண்டுமே உந்தன் மடி
நீளுமே ஒற்றை நொடி
நீ.... மதுரமடி

பார்த்தும் கரைந்தேனடா
காதலில் உறைந்தேனடா
காற்றிலே பறந்தேனடா
சட்டென மலர்ந்தேனடா

ஜில் என்று பனிக் காற்று
தொட்டதாய் சிலிர்தேனே
காரணம் புரியாமல்
நான் தினம் சிரித்தேனே


கேட்கும் போது இல்லை என்று ஏங்க வைக்கிறாய்
ஏக்கம் தீர கொஞ்சம் எல்லை மீற வைக்கிறாய்
என்னை சுற்றி ஜாலம் செய்து மழை பொய்யுதே
பார்க்கும் யாவும் இப்போதெல்லாம் அழகானதே

காதலின் வெப்பம் நம்மைத் தீண்டும்
மீண்டும் மீண்டும் அந்த வெப்பம் வேண்டும்
ராத்திரி ஜாமத்திலே சந்திரன் பார்க்கவில்லை
தூக்கமும் ஈர்க்கவில்லை நேரம் காலம் ஏதும் புரியவில்லை

பார்த்தும் திகைத்தேனே நான்
காதலில் கிளைத்தேனே நான்
மீண்டுமே ஜனித்தேனே நான்
தோற்றுதான் ஜெயிப்பேனே நான்

ஜில் என்று பனிக் காற்று
தொட்டதாய் சிலிர்தேனே
காரணம் புரியாமல்
நான் தினம் சிரித்தேனே

பார்த்தும் திகைத்தேனே நான்
காதலில் உறைந்தேனடா
மீண்டுமே ஜனித்தேனே நான்
சட்டென மலர்ந்தேனடா