Thursday, March 18, 2010

ஏ துஷ்யந்தா...


படம்: அசல்
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: சுர்முகி, குமரன்
வரிகள்:

ஏ துஷ்யந்தா... ஏ துஷ்யந்தா...
உன் சகுந்தலா தேடி வந்தாள்
ஏ துஷ்யந்தா நீ மறந்ததை
உன் சகுந்தலா மீண்டும் தந்தாள்

கள்ள பெண்ணே
என் கண்ணை கேட்கும் கண்ணே
என் கற்பை திருடும் முன்னே
நான் தப்பை விட்டு தப்பி வந்தேன்

மீண்டும் நீ நேரில் வந்து நின்றாய்
என் நெஞ்சை கொத்தி தின்றாய்
எனக்கு உன்னை நினைவில்லையே

பூங்காவில் மழை வந்ததும்
புதர் ஓன்று குடையானதும்
மழை வந்து நனைக்காமலே
மடி மட்டும் நனைந்ததை
மறந்தது என்ன கதை

(ஏ துஷ்யந்தா...)


அழகான பூக்கள் பூக்கும் தேன் ஆற்றங்கரையில்
அடையாளம் தெரியாத ஆலமர இருட்டில்

இருள் கூட அறியாத இன்பங்களின் முகட்டில்
இருபேரும் கைதானோம் முத்தங்களின் திருட்டில்

வருடி தந்தாய் மனதை
திருடி கொண்டாய் வயதை
அது கிளையோடு வேர்களும் பூத்த கதை

ஆலாலங் காட்டுக்குள் ஒரு
ஓட்டு வீட்டுக்குள்ளே
உன்னை போர்த்துக்கொண்டு படுத்தேன்

பாலாற்றில் நீராடும்போது
துவட்ட துண்டு இல்லை
கூந்தல் கொண்டு உன்னை துடைத்தேன்

அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சில காலம்

(ஏ துஷ்யந்தா...)


மானாடும் மலைப்பக்கம் ஏரிக்கரை அருகில்
மயிலாடும் ஜன்னல் கொண்ட மாளிகையின் அறையில்

கண்ணாடி பார்த்துகொண்டே
கலை யாவும் பயின்றோம்
கருநீல போர்வைக்குள்ளே
இரு நாட்கள் இருந்தோம்

பகலில் எத்தனை கனவு
இரவில் எத்தனை நனவு
தூங்காத கண்ணுக்குளே சுக நினைவு

சம்மதம் கேளாமல் என்னை
சாய்த்து சாய்த்து கொண்டு
சட்டென்று சட்டென்று முத்தம் தந்தாய்

மாந்தோப்பில் மாந்தோப்பில் என்னை
மடியில் போட்டுகொண்டு
புல்லில்லா தேகத்தில் கொஞ்சம் மேய்ந்தாய்

அந்த நீல நதி கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சில காலம்

பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ

(ஏ துஷ்யந்தா...)