படம்: மன்மதன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: KK
வரிகள்: நா முத்துகுமார்
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் - என்
உசிருகுள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்
ஏ… இதயத்தின் உள்ளே பெண்ணெ நான்
செடி ஒண்ணு தான் வெச்சு வளர்த்தேன்
இன்று அதில் பூவாய் நீயே தான்
பூத்தவுடனே காதல் வளர்த்தேன்
ஏ புள்ள புள்ள உன்னை எங்க புடிச்சேன்
ஏ புள்ள புள்ள அதை கண்டுபுடிச்சேன்
ஏ புள்ள புள்ள உன்னை கண்ணில் புடிச்சேன்
ஏ புள்ள புள்ள உன்னை நெஞ்சில் வெதச்சேன்
ஏ புள்ள புள்ள...
(காதல் வளர்த்தேன்...)
பூவின் முகவரி காற்று அறியுமே
என்னை உன் மனம் அறியாதா
பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள்
உன்னை பார்த்ததும் பொழியாதா
பல கோடி பெண்ண்கள்தான்
பூமியிலே வாழலாம் - ஒரு
பார்வையால் மனதை
பறித்து சென்றவள் நீயடி
உனக்கெனவே காத்திருந்தாலே
கால் அடியில் வேர்கள் முழைக்கும்
காதலில் வழியும் இன்பம்தானே… தானே…
உனது பேரெழுதி பக்கத்திலே
எனது பேரை நானும் எழுதி வெச்சேன் - அது
மழையில் அழியாமல் குடை புடிச்சேன்
மழை விட்டும் நான் நனைஞ்சேன்..
(ஏ புள்ள புள்ள…)
(காதல் வளர்த்தேன்…)
உன்னை தவிர இங்கே எனக்கு யாரடி
உனது நிழலிலே ஓய்வெடுப்பேன்
உனது சுவாசத்தின் சூடு தீண்டினால்
மரணம் வந்தும் நான் உயிர்த்தெழுவேன்
உன் முகத்தை பார்க்கவே
என் விழிகள் வாழுதே
பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறேன் நானடி
உடல் பொருள் ஆவி அனைத்தும்
உனக்கெனவே தருவேன் பெண்ணெ
உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே… கண்ணே…
தந்தை அன்பு அது பிறக்கும் வரை
தாயின் அன்பு அது வளரும் வரை
தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ
உயிரோடு வாழும் வரை…
அடியே ஏ புள்ள புள்ள…
(காதல் வளர்த்தேன்…)