Saturday, December 26, 2009

சக்கரை நிலவே...


படம்: யூத்
இசை:
பாடியவர்கள்: ஹாரிஷ் ராகவேந்திரா
வரிகள்: வைரமுத்து

சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை
நீ இல்லையேல்
(சக்கரை நிலவே...)

மனம் பச்சைத் தண்ணிதான் பெண்ணே
அதை பற்ற வைத்ததுன் கண்ணே
என் வாழ்க்கை என்னும் காட்டை எரித்து
குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே

கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா
(சக்கரை நிலவே...)


காதல் என்ற ஒன்று
அது கடவுள் போல
உணரத்தானே முடியும்
அதில் உருவம் இல்லை

காயம் கண்ட இதயம்
ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே
சொல்ல அதில் வார்த்தை இல்லை

அன்பே உன் புன்னகை எல்லாம்
அடி நெஞ்சில் சேமித்தேன்
கண்ணே என் புன்னகை எல்லாம்
கண்ணீராய் உருகியதே

வெள்ளை சிரிப்புகள் உன் தவறா
அதில் கொள்ளை போனது என் தவறா
பிரிந்து சென்றது உன் தவறா
நான் புரிந்துக் கொண்டது என் தவறா

ஆண் கண்ணீர் பருகும்
பெண்ணின் இதயம்
சதை அல்ல
கல்லின் சுவரா
(கவிதை பாடின...)


நவம்பர் மாத மழையில்
நான் நனைவேன் என்றேன்
எனக்கும் கூட நனைதல்
மிக பிடிக்கும் என்றாய்

மொட்டை மாடி நிலவில்
நான் குளிப்பேன் என்றேன்
எனக்கும் அந்த குளியல்
மிக பிடிக்கும் என்றாய்

சுகமான குரல் யார் என்றால்
சுசீலாவின் குரல் என்றேன்
எனக்கும் அந்த குரலில் ஏதோ
மயக்கம் என நீ சொன்னாய்

கண்கள் மூடிய புத்த சிலை
என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்
தயக்கம் என்பது சிறிதும் இன்றி
அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்

அடி எனக்கும் உனக்கும்
எல்லாம் பிடிக்க
என்னை ஏன்
பிடிக்காதென்றாய்
(கவிதை பாடின...)