Saturday, December 11, 2010

இதுதான் இதுதான் உச்சக் கட்டம்


படம்: பார்த்தாலே பரவசம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சுஜாதா, கல்யாணி மேனன், ஸ்ரீராம், ஸ்ரீராம் நாராயணன்
வரிகள்: வைரமுத்து

அதிசய திருமணம் ஆனந்த திருமணம்
அருள்மிகு திருமணமே
அழகிய திருமணம் அபூர்வ திருமணம்
அர்த்தமுள்ள திருமணமே

இதுதான் இதுதான் உச்சக் கட்டம்
இனிமேல் இனிமேல் மிச்சக் கட்டம் (2)
இனிது இனிது உச்சக் கட்டம்
இனியும் உள்ளது மிச்சக் கட்டம் (2)

திருமணம் ஒரு தாயக் கட்டம்
தேவர் ஆடும் மாயக் கட்டம்
இளமைக்கு இதுதான் உச்சக் கட்டம்
இனிமேல் அதிர்ஷ்ட மச்சக் கட்டம்

நள்ளிரவு கைதி இனி நீ (3)
வெள்ளிவரை வெள்ளிவரை இரு நீ
நள்ளிரவு கைதி இனி நீ (2)
பள்ளி அறை அய்தி படி நீ
மூனு மொழி மூனு மொழி கவனி

இது தித்திக்கின்ற தேதி
நான் அறிந்த செய்தி
(அதிசய திருமணம்...)


தாக்சயன காமசுத்ரம்
மனமுடித்தவர் கேக்கமற்றம்
கொஞ்சும் கணவனின் வருகை கண்டு
நெஞ்சில் கவலையை பூட்டு
கொஞ்சும் கணவனின் வருகை கண்டு
நெஞ்சில் கவலையை பூட்டு
இன்பம் இரவினில் மட்டும் இல்லை
அன்னும் அருசுவை ஊட்டு

மணவாழ்வில் இடி மழை வந்தால்
இளையவளே நீ
குடை என மாறு
இளமானே தலைவனை வெல்ல
தொற்றிடும் எல்லை
ஜெயிப்பதை விடு
இளமானே தலைவனை வெல்ல
தொற்றிடும் எல்லை
ஜெயிப்பது வீடு
(இதுதான்...)
(நள்ளிரவு...)


புருஷ லட்சணம் சலையலில் காட்டு
மனைவி போடுவாள்
உனக்கென ஊட்டு

கொல்லும் கால்வலி மனைவியை வாட்ட
மெல்ல உதவிடு பிடித்து
சிணுங்கும் மனைவியை சிரித்து வைக்க
சொல்லு ஜோக்குகள் படித்து
தினம்தோறும் மனைவியை பார்த்து
பேரழகியென்று அழள் புகழ் பாடு
தினம்தோறும் மனைவியை பார்த்து
பேரழகியென்று அழள் புகழ் பாடு
தினம்தோறும் மனைவியை பார்த்து
பேரழகியென்று அழள் புகழ் பாடு

குறை தீர்ந்து
நன்மைபயர்க்கும் மேனில் பூமயும்
வாய்மை இடர்த்து
(அதிசய திருமணம்...)

அழகிய திருமணம் அபூர்வ திருமணம்
அர்த்தமுள்ள திருமணமே...

Sunday, May 30, 2010

பூ மீது யானை...


படம்: டிஷ்யூம்
இசை: விஜய் ஆண்டனி
பாடியவர்கள்: மால்குடி சுபா
வரிகள்:

பூ மீது யானை
பூவலியை தாங்குமோ
தீ மீது வீணை
போய் விழுந்தால் பாடுமோ

போ என்று சொன்னால்
வரும் நினைவும் போகுமோ
போராடும் அன்பில்
அட ஏன்தான் காயமோ

கண்ணீர் கவிதைகள்
இந்தக் கண்கள் எழுதுதே
கவிதை வரிகளால்
எந்தன் கன்னம் நிறையுதே

இலைகள் உதிர்வதால்
கிளையின் சுமைகள் கூடுதே
உதிரும் இலைகளோ
மறந்து காற்றில் போகுதே

(பூ மீது யானை...)


உடைத்துப் பார்க்கும் இதயம் உனது
பதைத்து பார்ப்பதை அறியாதே
குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு
நிஜத்தில் உலகத்தில் உடையாதே... உடையாதே...

உடைத்துப் பார்க்கும் இதயம் உனது
பதைத்து பார்ப்பதை அறியாதே
குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு
நிஜத்தில் உலகத்தில் உடையாதே... உடையாதே...

காதல் போலவே
நோயும் இல்லையே
யாவும் உண்மை தானே

இதை காலம் காலமாய்
பலரும் சொல்லியும்
கேட்கவில்லை நானே

(பூ மீது யானை...)


விலகும்போது நெருங்கும் காதல்
அருகில் போனால் விலகிடுமோ
விலங்கு மாட்டி சிறையில் பூட்டி
விருப்பம்போல் அது வலி தருமோ

விலகும்போது நெருங்கும் காதல்
அருகில் போனால் விலகிடுமோ
விலங்கு மாட்டி சிறையில் பூட்டி
விருப்பம்போல் அது வலி தருமோ

வேறு வேறென
நினைவு போகையில்
காதல் கொள்தல் பாவம்

அது சேரும் வரையிலே
யாரும் துணையில்லே
ஆதி கால சாபம்!

(பூ மீது யானை...)
(பூ மீது யானை...)

Saturday, May 29, 2010

உனக்கென இருப்பேன்...


படம்: காதல்
இசை:
பாடியவர்கள்:
வரிகள்: நா முத்துக்குமார்

உனக்கென இருப்பேன்
உயிரையும் கொடுப்பேன்
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்
கண்மணியே... கண்மணியே...
அழுவதேன்... கண்மணியே...
வழித்துணை நான் இருக்க...

(உனக்கென இருப்பேன்...)


கண்ணீர் துளிகளைக் கண்கள் தாங்கும்
கண்மணி காதலின் நெஞ்சம்தான் தாங்கிடுமா
கல்லறை மீதுதான் பூத்த பூக்கள்
என்றுதான் வண்ணத்துப் பூச்சிகள் பார்த்திடுமா

மின்சாரக் கம்பிகள் மீதும்
மைனாக்கள் கூடு கட்டும்
நம் காதல் தடைகளைத் தாண்டும்

வளையாமல் நதிகள் இல்லை
வலிக்காமல் வாழ்க்கை இல்லை
வரும் காலம் காயம் ஆற்றும்

நிலவொளியை மட்டும் நம்பி
இலையெல்லாம் வாழ்வதில்லை
மின்மினியும் ஒளி கொடுக்கும்
(உனக்கென இருப்பேன்...)


தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய்
தோழியே இரண்டுமாய் என்றுமே நானிருப்பேன்
தோளிலே நீயுமே சாயும்போது
எதிர்வரும் துயரங்கள் அனைத்தையும் நான் எதிர்ப்பேன்

வெந்நீரில் நீ குளிக்க
விறகாகித் தீக் குளிப்பேன்
உதிரத்தில் உன்னைக் கலப்பேன்

விழி மூடும் போதும் உன்னை
பிரியாமல் நான் இருப்பேன்
கனவுக்குள் காவல் இருப்பேன்

நான் என்றால் நானேயில்லை
நீதானே நானாய் ஆனேன்
நீ அழுதால் நான் துடிப்பேன்

(உனக்கென இருப்பேன்...)

Wednesday, May 12, 2010

கவிதை கேளுங்கள்...


படம்: புன்னகை மன்னன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: வாணி ஜெயராம்
வரிகள்: வைரமுத்து

கவிதை கேளுங்கள்
கருவில் பிறந்தது ராகம்

நடனம் பாருங்கள்
இதுவும் ஒரு வகை யாகம்

பூமி இங்கு
சுற்றும் மட்டும்
ஆட வந்தேன்
என்ன நட்டம்
(பூமி...)

ஓடும் மேகம்
நின்று பார்த்து
கைகள் தட்டும்
(கவிதை...)


நேற்று என் பாட்டில்
சுதியும் விலகியதே
பாதை சொல்லாமல்
விதியும் விலகியதே

காலம் நேரம்
சேரவில்லை
காதல் ரேகை
கையில் இல்லை

சாக போனேன்
சாகவில்லை
மூச்சு உண்டு
வாழவில்லை

வாய் திறந்தேன்
வார்த்தை இல்லை
கண் திறந்தேன்
பார்வை இல்லை

தனிமையே
இளமையின்
சோதனை

புரியுமா
இவள் மனம்
இது விடுகதை
(கவிதை...)


ஓம் ததீம்த தீம் பதங்கள் ஆட
ஜகம் நடுங்க என் பதங்கள் ஆட
ஜகன ஜகன
தம் தம் தக
ஜகன ஜகன
தம் தம் தம்
ஜகன ஜகன
தம் தம் தக்க
ஜகன ஜகன
தம் தம் தம்
ஜகன தீம்த தீம்த தீம்த
தீம்த தீம்த தீம்த தீம்த
ஓம் ததீம்த தீம் பதங்கள் ஆட
ஜகம் நடுங்க என் பதங்கள் ஆட

பாறை மீது
பவள மல்லிகை
பதியம் போட்டதாரு

ஓடும் நீரில்
காதல் கடிதம்
எழுதிவிட்டது யாரு

அடுப்பு கூட்டி
அவிச்ச நெல்லை
விதைத்து விட்டது யாரு

அலையில் இருந்து
உலையில் விழுந்து
துடி துடிக்குது மீனு

இவள் கனவுகள் நனவாக
மறுபடி ஒரு உறவு

சலங்கைகள் புது இசை பாட
விழியட்டும் இந்த இரவு

கிழக்கு வெளிச்சம்
இருட்டை கிழிக்கட்டும்
இரவின் முடிவில்
கனவு பலிக்கட்டும்
இருண்டு கிடக்கும்
மனமும் வெளுக்கட்டும்

ஓம் ததீம்த தீம் பதங்கள் ஆட
ஜகம் நடுங்க என் பதங்கள் ஆட
ஓம் ததீம்த தீம் பதங்கள் ஆட
ஜகம் நடுங்க என் பதங்கள் ஆட

.!

Saturday, May 8, 2010

தோழா தோழா...


படம்: பாண்டவர் பூமி
இசை:
பாடியவர்கள்: யுகேந்திரன், சுஜாதா
வரிகள்:

தோழா தோழா...
கனவுத் தோழா...

தோழா தோழா...
தோள்கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்

நட்பைப் பற்றி
நாமும் பேசித் தீர்த்துக்கணும்

உன்னை நான் புரிஞ்சுக்கணும்
ஒன்னொண்ணா தெரிஞ்சிக்கணும்

ஆணும் பெண்ணும்
பழகிக்கிட்டால் காதலாகுமா

அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்
நட்பு மாறுமா?


நட்புக்குள் பொய்கள் கிடையாது
நட்புக்குள் தவறுகள் நடக்காது
நட்புக்குள் தன்னலம் இருக்காது
நட்புக்கு ஆண் பெண் தெரியாது

நட்பு என்னும் நூலெடுத்து
பூமியை கட்டி நீ நிறுத்து
நட்பு நட்புதான் காதல் காதல்தான்
காதல் மாறலாம் நட்பு மாறுமா?

காதல் ஒன்றும் தவறே இல்லை
காதல் இன்றி மனிதனும் இல்லை
நண்பர்களும் காதலராக
மாறிய பின் சொல்லிய உண்மை

இப்ப நீயும் நானும் பழகுறமே
காதலாகுமா
இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்
நட்பு மாறுமா?

தோழா தோழா
கனவுத் தோழா
தோழா தோழா
தோள்கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்

நீயும் நானும் வெகுநேரம்
மனம்விட்டுப் பேசிச் சிரித்தாலும்
பிரியும் பொழுதில் சில நொடிகள்
மெளனம் கொள்வது ஏன் தோழி

புரிதலில் காதல் இல்லையடி
பிரிதலில் காதலைச் சொல்லி விடு

காதல் காதல்தான்
நட்பு நட்புதான்
நட்பின் வழியிலே
காதல் வளருமே!

பிரிந்து போன நட்பினைக் கேட்டால்
பசுமையான கதைகளைச் சொல்லும்
பிரியமான காதலும் கூட
பிரிந்த பின்னே ரணமாய்க் கொல்லும்

ஆணும் பெண்ணும்
காதல் இல்லாமல் பழகிக்கலாம்

ஆயுள் முழுதும்
களங்கப்படாமல் பார்த்துக்கலாம்

தோழா தோழா
கனவுத் தோழா

தோழா தோழா
தோள்கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்

நட்பைபப் பற்றி
நாமும் பேசித் தீர்த்துக்கணும்.

உன்னை நான் புரிஞ்சுக்கணும்
ஒன்னொண்ணா தெரிஞ்சிக்கணும்

ஆணும் பெண்ணும்
காதலில்லாமல் பழகிக்கலாம்

அது ஆயுள் முழுதும்
களங்கப்படாமல் பார்த்துக்கலாம்

Thursday, May 6, 2010

கண் பேசும் வார்த்தைகள்...


படம்: 7G ரெயின்போ காலனி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: கார்த்திக்
வரிகள்: நா முத்துகுமார்

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை

காற்றில் இலைகள் பறந்த பிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள் மனம் மறப்பதில்லை
ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை


காட்டிலே காயும் நிலவை
கண்டுகொள்ள யாருமில்லை
கண்களின் அனுமதி வாங்கி
காதலும் இங்கே வருவதில்லை
தூரத்தில் தெரியும் வெளிச்சம்
பாதைக்கு சொந்தமில்லை
மின்னலின் ஒளியை பிடிக்க
மின்மினி பூச்சிக்கு தெரியவில்லை
விழி உனக்கு சொந்தமடி
வேதனைகள் எனக்கு சொந்தமடி
அலை கடலை கடந்த பின்னே
நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி


உலகத்தில் எத்தனை பெண் உள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது
ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது
இது உயிர்வரை பாய்ந்து பந்தாடுது
பனித் துளி வந்து மோதியதால்
இந்த முள்ளும் இங்கே துண்டானது
பூமியில் உள்ள பொய்களெல்லாம்
ஆட புடவை கட்டி பெண்ணானது
புயல் அடித்தால் மலை இருக்கும்
மரங்களில் பூக்களும் மறைந்து விடும்
சிரிப்பு வரும் அழுகை வரும்
காதலில் இரண்டுமே கலந்து வரும்

ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லையே
(கண் பேசும் வார்த்தை....)

Sunday, April 25, 2010

எப்படி எப்படி காதலும் வருதோ...


படம்: ABCD
இசை: D இமான்
பாடியவர்கள்:
வரிகள்:


எப்படி எப்படி காதலும் வருதோ
எப்படி உள்ளத்தின் வேர்களைத் தொடுதோ
அட ஜன்னலை அடைத்தால்
இது கதவையும் உடைக்கும்
காதல் என்னும் காற்று

கடைசி மழையும் காதல் இல்லை
மறையும் பொருளும் காதல் இல்லை
தொலைந்து கிடக்கும் உணர்ச்சி தானே காதல்
மொத்தமாக பூத்துப் பூத்து
சுத்தமாக வாடி வாடி
மறுபடியும் மொட்டு விட்டுப் பூக்கும்
எட்டிப் பார்க்கும்

Saturday, April 24, 2010

காதல் இல்லை சாதல் இல்லை...


படம்: ABCD
இசை: D இமான்
பாடியவர்கள்: D இமான்
வரிகள்: சரவண சுப்பையா



காதல் இல்லை சாதல் இல்லை
உறவேதும் இல்லையே
இனி நம் வாழ்வில் யாரோ

யாருக்கு யார் சொந்தம்
எங்கிருந்து நாம் வந்தோம்
நமக்குள்ளே நாம் போடும் பந்தம்
இந்த சொந்தம்

தாயின் வயிற்றில் முன்னூறு நாள்
மனைவி சுகத்தில் தொண்ணூறு நாள்
இடையில் வருவதெல்லாம் எதை சொல்லும் நாள்
எதை சொல்லும் நாள்


கட்டிய கணவன் கட்டிலில் உறவு
மோகமும் தாக்கமும் தொட்டிலில் முறிவு
அவன் காட்டிடும் அன்பும்
அவன் ஊட்டிடும் உறவும்
எத்தனை நாள் பந்தம்

மாடி வீட்டு செவத்த பொண்ணு
கூரை வீடு கறுத்த பையன்
கடைசியில போற இடம் சொல்லு
பொறக்கிறப்போ மனுஷ ஜாதி
இறக்கிறப்போ என்ன மீதி
கடைசியில போற இடம் மண்ணு - ஆறடி மண்ணு


உடம்பில் ஒன்பது வாசல்கள் உண்டு
இருவர் இணைந்து திறப்பது ஒன்று
அட வாழ்க்கையின் கதையை - அந்த
இறைவனும் எழுத
படிக்க மறந்த மனிதா

பிறவி நூறு எடுத்த போதும்
எடுத்த பிறவி முடித்த போதும்
ஜென்மங்கள் கரை சேருதே
உன் கருமாக்கள் மலை ஏறுதே
அந்த ஆன்மாக்கள் அழியாததே

Monday, April 12, 2010

மாலை நேரம் மழை தூறும் காலம்...


படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: ஆன்ரியா ஜெரெனியா, GV பிரகாஷ்
வரிகள்:

மாலை நேரம்
மழை தூறும் காலம்
என் ஜன்னல் ஓரம்
நிற்கிறேன்

நீயும் நானும்
ஒரு போர்வைக்குள்ளே
சிறு மேகம்போலே
மிதக்கிறேன்

ஓடும் காலங்கள்
உடன் ஓடும் நினைவுகள்
வழி மாறும் பயணங்கள்
தொடர்கிறதே

இதுதான் வாழ்க்கையா
ஒரு துணைதான் தேவையா
மனம் ஏனோ என்னையே
கேட்கிறதே

ஓஹோ.. காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது
அன்பே

இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம்
அன்பே...
இதம் தருமே …


உன் கரம் கோர்க்கையில்
நினைவு ஓராயிரம்
பின் இருகரம் பிரிகையில்
நினைவு நூறாயிரம்
காதலில் விழுந்த இதயம்
மீட்க முடியாதது
கனவில் தொலைந்த நிஜங்கள்
மீண்டும் கிடைக்காதது

ஒரு காலையில் நீயில்லை
தேடவும் மனம் வரவில்லை
பிரிந்ததும் புரிந்தது
நான் என்னை இழந்தேன் என

ஓஹோ.. காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஓன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது
அன்பே

இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம்
அன்பே...
இதம் தருமே...


ஒரு முறை
வாசலில்
நீயாய் வந்தால் என்ன -
நான் கேட்கவே
துடித்திடும்
வார்த்தை சொன்னால் என்ன!

இரு மனம் சேர்கையில் பிழைகள்
பொறுத்து கொண்டால் என்ன
இருதிசை பறவைகள் இணைந்து
விண்ணில் சென்றால் என்ன

என் தேடல்கள் நீயில்லை
உன் கனவுகள் நானில்லை
இருவிழி பார்வையில்
நாம் உருகி நின்றால் என்ன


மாலை நேரம்
மழை தூறும் காலம்
என் ஜன்னல் ஓரம்
நிற்கிறேன்

நீயும் நானும்
ஒரு போர்வைக்குள்ளே
சிறு மேகம்போலே
மிதக்கிறேன்

ஓடும் காலங்கள்
உடன் ஓடும் நினைவுகள்
வழி மாறும் பயணங்கள்
தொடர்கிறதே

இதுதான் வாழ்க்கையா
ஒரு துணைதான் தேவையா
மனம் ஏனோ என்னையே
கேட்கிறதே

காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது
அன்பே... அன்பே...

இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம்
அன்பே.... இதம் தருமே… இதம் தருமே…?

Tuesday, April 6, 2010

இதுவரை இல்லாத உணர்விது... (m)


படம்: கோவா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்:

இதுவரை
இல்லாத உணர்விது
இதயத்தை
துண்டாக்கும் நினைவிது
மனதினை
மண்ணோடு புதைத்திடும்
பெண்ணை நம்பாதே!

காதல் என்றால்
அத்தனையும் கனவு
கண் மூடியே
வாழ்கின்ற உறவு
பெண்கள் என்றால்
ஆணை கொல்லும்
நோய் ஆனதே


ஐயோ இந்த இளமையின் தொடக்கம்
இன்றே முற்றுப்புள்ளி
அதை சொல்லாமல் சொல்லி
நம்மை பைத்தியம் ஆக்கும்
பெண்ணை தேடி தொலையாதே!

Sunday, April 4, 2010

காதலின்றிக் காதல் செய்யீர்!

DON'T LOVE WITHOUT LOVE!

Thursday, April 1, 2010

Heart vs Brain?

Love is all about heart. If your brain can influence your heart, please don't experiment love. Your brain will kill someone's heart!

Wednesday, March 31, 2010

இதுவரை இல்லாத உணர்விது...


படம்: கோவா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: அஜீஷ், ஆன்ரியா ஜெரெனியா
வரிகள்:

இதுவரை
இல்லாத உணர்விது
இதயத்தில்
உண்டான கனவிது
பலித்திடும்
அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ
(இதுவரை...)

மூடாமல்
மூடி மறைத்தது
தானாக
பூத்து வருகுது
தேடாமல்
தேடி கிடைத்தது
இங்கே...
(மூடாமல்...)


இங்கே ஒரு
இன்பம் வந்து நிறைய
எப்போது என்
உண்மை நிலை அறிய
தாங்காமலும்
தூங்காமலும்
நாள் செல்லுதே

இல்லாமலே
நித்தம் வரும் கனவு
கொல்லாமல் கொல்ல
சுகம்
என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என்
பயணம்


அங்கே அங்கே
வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும்
வெண்ணிலவும் போல
எந்தன் மன
எண்ணங்களை
யார் அறிவார்

என் நெஞ்சமோ
உன் போல அல்ல
ஏதோ ஓர் மாற்றம்
நிலை புரியாத தோற்றம்
இது நிரந்தரம் அல்ல
மாறிவிடும் மன நிலை தான்


மனதிலே
உள்ளூறும் உணர்வுகள்
மலர்ந்ததே
முத்தான உணர்வுகள்
திறந்ததே
தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே
(மனதிலே...)


தேகம்
இப்போது உணர்ந்தது
தென்றல்
என் மீது படர்ந்தது
மோகம்
முன்னேறி வருகுது
முன்னே
(தேகம்...)

Thursday, March 18, 2010

ஏ துஷ்யந்தா...


படம்: அசல்
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: சுர்முகி, குமரன்
வரிகள்:

ஏ துஷ்யந்தா... ஏ துஷ்யந்தா...
உன் சகுந்தலா தேடி வந்தாள்
ஏ துஷ்யந்தா நீ மறந்ததை
உன் சகுந்தலா மீண்டும் தந்தாள்

கள்ள பெண்ணே
என் கண்ணை கேட்கும் கண்ணே
என் கற்பை திருடும் முன்னே
நான் தப்பை விட்டு தப்பி வந்தேன்

மீண்டும் நீ நேரில் வந்து நின்றாய்
என் நெஞ்சை கொத்தி தின்றாய்
எனக்கு உன்னை நினைவில்லையே

பூங்காவில் மழை வந்ததும்
புதர் ஓன்று குடையானதும்
மழை வந்து நனைக்காமலே
மடி மட்டும் நனைந்ததை
மறந்தது என்ன கதை

(ஏ துஷ்யந்தா...)


அழகான பூக்கள் பூக்கும் தேன் ஆற்றங்கரையில்
அடையாளம் தெரியாத ஆலமர இருட்டில்

இருள் கூட அறியாத இன்பங்களின் முகட்டில்
இருபேரும் கைதானோம் முத்தங்களின் திருட்டில்

வருடி தந்தாய் மனதை
திருடி கொண்டாய் வயதை
அது கிளையோடு வேர்களும் பூத்த கதை

ஆலாலங் காட்டுக்குள் ஒரு
ஓட்டு வீட்டுக்குள்ளே
உன்னை போர்த்துக்கொண்டு படுத்தேன்

பாலாற்றில் நீராடும்போது
துவட்ட துண்டு இல்லை
கூந்தல் கொண்டு உன்னை துடைத்தேன்

அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சில காலம்

(ஏ துஷ்யந்தா...)


மானாடும் மலைப்பக்கம் ஏரிக்கரை அருகில்
மயிலாடும் ஜன்னல் கொண்ட மாளிகையின் அறையில்

கண்ணாடி பார்த்துகொண்டே
கலை யாவும் பயின்றோம்
கருநீல போர்வைக்குள்ளே
இரு நாட்கள் இருந்தோம்

பகலில் எத்தனை கனவு
இரவில் எத்தனை நனவு
தூங்காத கண்ணுக்குளே சுக நினைவு

சம்மதம் கேளாமல் என்னை
சாய்த்து சாய்த்து கொண்டு
சட்டென்று சட்டென்று முத்தம் தந்தாய்

மாந்தோப்பில் மாந்தோப்பில் என்னை
மடியில் போட்டுகொண்டு
புல்லில்லா தேகத்தில் கொஞ்சம் மேய்ந்தாய்

அந்த நீல நதி கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சில காலம்

பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ

(ஏ துஷ்யந்தா...)

Sunday, March 14, 2010

உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்...


படம்: நெஞ்சில் ஜில் ஜில்
இசை: D இமான்
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சுஜாதா
வரிகள்: பழனி பாரதி

நெஞ்சில் ஜில் ஜில்
எனக் காதல் பிறக்கும்
நெஞ்சே நின்றாலும்
காதல் துடிக்கும்
அழியாது காதல்
அழியாது காதல்

உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்
விழி மூடும்போதும் உன்னைக் காண்கிறேன்
ஆகாயம் எல்லாம் நாம் வாழும் வீடு
விண்மீன்கள் எல்லாம் அங்கே
நாம் வந்த பாதச் சுவடு

தீராத தேடல் இது
தித்திக்கும் தூறல் இது

(உனக்காகத்தானே...)


தேவதை போல வந்து காதல் இறங்கும்
அசரீரியாக நின்று பேசிச் சிரிக்கும்

புரியாது பெண்ணே
காரணங்கள்
ஜில் ஜில் ஜில் நெஞ்சில்
த ன னா ன னா த ன னா ன

வெட்கங்கள் கொடியேற்றி போகும் ஓர் ஊர்கோலம்
முத்தங்கள் மாநாடு கொண்டாடும் இதழ் ஓரம்
பொல்லாத ஏக்கங்கள் போடும் ஓர் தீர்மானம்
பெண் நெஞ்சம் முன் வந்தால் தீர்மானம் நிறைவேறும்

காதலின் ஆட்சிதானே நமக்கிங்கு வேண்டும்
பூமியைத் தூசி தட்டி சுற்ற விடு மீண்டும்

(உனக்காகத்தானே...)


காதலை தெய்வம் என்று கைகள் வணங்கும்
காதலில் மட்டும்தானே உள்ளம் அடங்கும்

சலவைக்கல் சிலையே
பூஜிக்க வா
ரகசிய பூவாய்
தனனானனா

உன் வாசம் இல்லாமல் பூவாசம் எனக்கேது
அதிகாலை தேநீரில் தித்திப்பு இருக்காது
என் தட்ப வெட்பங்கள் நீ இன்றி குறையாது
பூந்தென்றல் புகை ஆகும் சுவாசிக்க பிடிக்காது

பூவுக்கு வெண்ணிலவு பால் ஊட்டும் நேரம்
ஐயய்யோ பூமி எங்கும் ஆனந்தத்தின் ஈரம்
(உனக்காகத்தானே...)

நெஞ்சில் ஜில் ஜில்
எனக் காதல் பிறக்கும்

உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்

ஒரு தேவதை பார்க்கும் நேரமிது...


படம்: வாமணன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ரூப்குமார்
வரிகள்:

ஒரு தேவதை பார்க்கும் நேரமிது
மிக அருகினில் இருந்தும் தூரமிது
இதயமே... ஓ...
இவளிடம்... உருகுதே...

இந்த காதல் நினைவுகள் தாங்காதே
அது தூங்கும் போதிலும் தூங்காதே
பார்க்காதே ஓ...
என்றாலும் ஓ...
கேட்காதே ஓ...


என்னை என்ன செய்தாய் பெண்ணே
நேரம் காலம் மறந்தேனே
கால்கள் இரண்டும் தரையினில் இருந்தும்
வானில் பறக்கிறேன்

என்ன ஆகிறேன் எங்கு போகிறேன்
வாழ்க்கை தெரிந்தும் தொலைத்து போகிறேன்
காதல் என்றால் ஓ...
பொல்லாதது
புரிகின்றது ஓ...

(ஒரு தேவதை..)


கண்கள் இருக்கும் காரணம் என்ன
என்னை நானே கேட்டேனே
உனது அழகை காணத்தானே
கண்கள் வாழுதே

மரண நேரத்தில் உன் மடியின் ஓரத்தில்
இடமும் கிடைத்தால் இறந்தும் வாழ்வேன்
உன் பாதத்தில் முடிகின்றதே
என் சாலைகள் ஓ...

இந்த காதல் நினைவுகள் தாங்காதே
அது தூங்கும் போதிலும் தூங்காதே

(ஒரு தேவதை..)

Wednesday, March 3, 2010

என் காதல் சரியோ தவறோ...


படம்: குட்டி
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: கே கே
வரிகள்:

Feel my love

என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ
என் காதல் முதலோ முடிவோ
சகியே Feel my love
என் காதல் வெயிலோ நிழலோ
என் காதல் இனிப்போ கசப்போ
என் காதல் நிறையோ குறையோ
சகியே Feel my love
என் காதல் சிலையோ கல்லோ
என் காதல் சிறகோ சருகோ
என் காதல் வலியோ சுகமோ
வெறுத்தோம் பிடித்தோம் அடித்தோம் அணைத்தோம்
Feel my love Feel my love
Feel my love Feel my love
(என் காதல்..)


நான் தந்த பூவை எல்லாம் வீசும்போது Feel my love
என் காதல் கடிதம் கிழிக்கும்போது Feel my love
என் வீடு தெரியும் ஜன்னல் மூடும்போது Feel my love
என் செய்கை எல்லாம் வெறுக்கும்போது Feel my love
சில வார்த்தை திட்டி பேசு அதுகூட கோபமே
என் காதல் வெற்றிப்பெற்ற சந்தோஷம் கொள்ளுமே
மேகத்தில் போகும்போது தரை தட்டும் கல்லைப்போல
Feel my love Feel my love
Feel my love Feel my love
(என் காதல்..)


கைவிசிறி போலே உன் கை தீண்டும்வரம் வேண்டாம்
மின்விசிறியாக வாழ்வேன் அழகே Feel my love
பன்னிரெண்டு மணி முள்ளை போல சேரும் ஆசை இல்லை
தண்டவாளம் போலே தொடர்வேன் அன்பே Feel my love
யார் கண்ணை பார்க்க வேண்டும் விண்மீன்தான் சொல்லுமா
யாரேனும் தீண்ட வந்தால் ரோஜாப்பூ கொல்லுமா
நான் உன்னை காதல் செய்ய தேவை இல்லை உந்தன் அனுமதியே
Feel my love Feel my love
Feel my love Feel my love
(என் காதல்...)

என் காதல் சொல்ல...


படம்: பையா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, தன்வி
வரிகள்: நா முத்துக்குமார்

என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி

உன் கையில் சேர ஏங்கவில்லை
உன் தோளில் சாய ஆசையில்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி

உன் அழகாலே உன் அழகாலே
என் வெயில் காலம் அது மழை காலம்
உன் கனவாலே உன் கனவாலே
மனம் அலை பாயும் மெல்ல குடை சாயும்

என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி


காற்றோடு கை வீசி நீ பேசினால்
எந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே
வயதோடும் மனதோடும் சொல்லாமலே
சில எண்ணங்கள் வலை வீசுதே

காதல் வந்தாலே கண்ணோடுதான்
கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ
கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி
இந்த விளையாட்டை ரசித்தேனடி

உன் விழியாலே உன் விழியாலே
என் வழி மாறும் கண் தடுமாறும்
அடி இது ஏதோ ஒரு புது ஏக்கம்
இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்


ஒரு வார்த்தை பேசாமல் என்னை பாரடி
உந்தன் நிமிடங்கள் நீளட்டுமே
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி
எந்தன் நெருக்கங்கள் தொடரட்டுமே


யாரும் பார்க்காமல் என்னை பார்க்கிறேன்
என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன்
சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது
உன்னை கண்டாலே குதிகின்றதே

என் அதிகாலை என் அதிகாலை
உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்
என் அந்திமாலை என் அந்திமாலை
உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்

என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி

உன் கையில் சேர ஏங்கவில்லை
உன் தோளில் சாய ஆசையில்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி

Tuesday, March 2, 2010

புது வெள்ளை மழை...


படம்: ரோஜா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னிமேனன், சுஜாதா
வரிகள்: வைரமுத்து

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கரை நானே!
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே!

(புது வெள்ளை மழை...)


பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூக்கேட்பதில்லை
பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூப்பூப்பதில்லை
உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது
இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது

(புது வெள்ளை மழை...)


நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப் பூ திடுக்கென்று மலரும்
நீ வெடுக்கென்று ஒடினால் உயிர்ப் பூ சருகாக உலரும்
இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ?
மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா என் மார்போடு வந்தாடுதோ?

(புது வெள்ளை மழை...)

Friday, February 26, 2010

ரகசியமானது காதல்...


படம்: கோடம்பாக்கம்?
இசை:
பாடியவர்கள்:
வரிகள்:

ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல்
ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம் தனை மறைக்கும்
ஒரு தலையாகவும் சுகம் அனுபவிக்கும்
சுவாரஸ்யமானது காதல் மிக மிக சுவாரஸ்யமானது காதல்


சொல்லாமல் செய்யும் காதல் கனமானது
சொல்ல சொன்னாலும் சொல்வதும் இல்லை மனமானது
சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது
இந்த சோகம் தானே காதலிலே சுகமானது
வாசனை வெளிசத்தை போல அது சுதந்திரமானதும் அல்ல
ஈரத்தை இருட்டினை போல அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல
(ரகசியமானது...)


கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டு கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது
கேட்கும் கேள்விக்காகத்தனே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது
நீரினை நெருப்பினை போல விரல் தொடுதலில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளை போல அதை உயிரினில் உணரனும் மெல்ல
(ரகசியமானது...)

Sunday, February 14, 2010

நெஞ்சோடு கலந்திடு...


படம்: காதல் கொண்டேன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: சுஜாதா, உன்னி கிருஷ்ணன்
வரிகள்:

நெஞ்சோடு கலந்திடு உறவாலே
காலங்கள் மறந்திடு அன்பே
நிலவோடு தென்றலும் வரும் வேளை
காயங்கள் மறந்திடு அன்பே

ஒரு பார்வை பார்த்து நான் நின்றால்
சிறு பூவாக நீ மலர்வாயா?
ஒரு வார்த்தை இங்கு நான் சொன்னால்
வலி போகும் என் அன்பே அன்பே
(நெஞ்சோடு...)


கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட
பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன்
புயல் போன பின்னும் புதுப் பூக்கள் பூக்கும்
இளவேனில் வரை நான் இருக்கின்றேன்
முக மூடி அணிகின்ற உலகிது
உன் முகம் என்று ஒன்றிங்கு என்னது
நதி நீரிலே அட விழுந்தாலுமே
அந்த நிலவென்றும் நனையாது வா நண்பா
(நெஞ்சோடு...)


காலங்கள் ஓடும் இது கதையாகிப் போகும் -
கண்ணீர்த் துளியின் ஈரம் வாழும்
தாயாக நீதான் தலை கோத வந்தாலும்
மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்
என் வாழ்க்கை நீ இங்கு தந்தது
அடி உன் நாட்கள் நான்னிங்கு வாழ்வது
காதல் இல்லை இது காமம் இல்லை
இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை
(ஒரு பார்வை...)
(நெஞ்சோடு...)

Saturday, January 30, 2010

நலம் வாழ என்னாளும்...


படம்: மறுபடியும்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்:

நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பண்பாடும்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பண்பாடும்

நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதில் என்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே

நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது
கடல்களில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது
நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்...


நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பண்பாடும்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பண்பாடும்
நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

Saturday, January 23, 2010

மழையே மழையே...


படம்: ஈரம்
இசை: தமன்
பாடியவர்கள்: ரஞ்சித்
வரிகள்:

விழியே விழியே பேசும் விழியே
ஒரு பார்வை பார்த்தாய்

மழையே மழையே நெஞ்சில் மழையே
தனியேத் தனியே வாழ்ந்தேன் தனியே
நான் மண்ணின் மேலே
இனிமே இனிமே நீதான் துணையே

மழையே மழையே தூவும் மழையே
இது காதல் தானா
தனியே தனியே நனைந்தேன் மழையே
உன் மனமே மனமே தீயாய் கொதிக்கும்
ஒரு காய்ச்சல் போலே
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே
(மழையே...)


ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கிறேன்
ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்
ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கிறேன்
ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்
உல்லா ஹ உல்லா ஹ ஒ
உல்லா ஹ உல்லா ஹ ஓ


உன் ஆடைபட்டாலே ஒரு சாரல் அடிக்கிறது
உன் ஓரப் புன்னகையாய் பெரும் தூரல் வருகிறது
உன் முகத்தில் அசையும் மொழி
இலைத்துளியாய் நனைக்கிறது
உன் கைகள் தீண்டுவதால் அடை மழையே பொழிகிறது

போதும் போ நீ போ என் கண்கள் வலிக்கிறது
போடிப்போ நீ போ என் உள்ளம் உணர்கிறது
(விழியே...)
(மழையே...)

Monday, January 11, 2010

ஒரு சின்னத் தாமரை...


படம்: வேட்டைக்காரன்
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்:
வரிகள்:

ஒரு சின்னத் தாமரை
என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள்
என் உள்ளம் தேடி தைக்கின்றதே

இதை உண்மை என்பதா
இல்லை பொய்தான் என்பதா
என் தேகம் முழுவதும்
ஒரு வெண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே

என் ரோம கால்களோ
ஒரு பயணம் போகுதே
உன் ஈரப் புன்னகை சுடுதே

என் காட்டு பாதையில்
நீ ஒற்றை பூவடா
உன் வாசம் தாக்கியே மலர்ந்தேன்... உயிரே
(ஒரு சின்னத் தாமரை...)


உன் பெயர் கேட்டாலே
அடி பாறையில் பூ பூக்கும்
உன் காலடி தீண்டிய வார்த்தைகள் எல்லாம்
கவிதைகளாய் மாறும்

உன்தெரு பார்த்தாலே
என் கண்கள் அலை மோதும்
உன் வாசல் தேடி போக சொல்லி
கெஞ்சுது என் பாதம்

என் வாழ்க்கை வரலாற்றில்
எல்லாமே உன் பக்கங்கள்

உன்னாலே என் வீட்டின்
சுவரெல்லாம் ஜன்னல்கள்

(ஒரு சின்னத் தாமரை...)


உன் குரல் கேட்டாலே
அந்த குயில்களுக்கும் கூசும்
நீ மூச்சினில் சுவாசித்த காற்றுகள்
மட்டும் மோட்சத்தினை சேரும்

அனுமதி கேட்காமல்
உன் கண்கள் என்னை மேயும்
நான் இத்தனை நாளாய் எழுப்பிய கோபுரம்
நொடியில் குடை சாயும்

உன் கைகள் கோர்க்காமல்
பயணங்கள் கிடையாது

உன்னோடு வந்தாலே
சாலைகள் முடியாது

(ஒரு சின்னத் தாமரை...)