படம்: சுப்பிரமணியபுரம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்கள்: பெலி ராஜ், தீபா மரியம்
வரிகள்: தாமரை
கண்கள் இரண்டால்... உன் கண்கள் இரண்டால்...
என்னை கட்டி இழுதாய்... இழுதாய் போதாதென...
சின்ன சிரிப்பில்... ஒரு கள்ள சிரிப்பில்...
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
கண்கள் இரண்டால்... உன் கண்கள் இரண்டால்...
என்னை கட்டி இழுதாய்... இழுதாய் போதாதென...
சின்ன சிரிப்பில்... ஒரு கள்ள சிரிப்பில்...
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
பேச எண்ணி சில நாள்... அருகில்... வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்... நினைத்தே… நகர்வேன்.. ஏமாற்றி...
கண்கள் எழுதும்... இரு கண்கள் எழுதும்...
ஒரு வண்ண கவிதை... காதல் தானா...
ஒரு வார்த்தை இல்லையே... இதில் ஓசையில்லையே...
இதை இருளிலும் படித்திட முடிகிறதே...
இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா
மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இதுவரை யாரிடமும்... சொல்லாத கதை
கண்கள் இரண்டால்... உன் கண்கள் இரண்டால்...
என்னை கட்டி இழுதாய்... இழுதாய் போதாதென...
சின்ன சிரிப்பில்... ஒரு கள்ள சிரிப்பில்...
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
திரைகள் அண்டாத... காற்றும் தீண்டாத
மனதிற்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத... உருவம் கொள்ளாத...
கடவுளை போல்வந்து... கலந்திட்டாய்
உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊனுயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே... உன்னோடு வர
கண்கள் எழுதும்... இரு கண்கள் எழுதும்...
ஒரு வண்ண கவிதை... காதல் தானா...
ஒரு வார்த்தை இல்லையே... இதில் ஓசையில்லையே...
இதை இருளிலும் படித்திட முடிகிறதே...
பேச எண்ணி சில நாள்... அருகில் வருவேன்...
பின்பு பார்வை போதுமென நான்...
நினைத்தே... நகர்வேன்... ஏமாற்றி...
கண்கள் இரண்டால்... உன் கண்கள் இரண்டால்...
எனை கட்டி இழுதாய்... இழுதாய்... போதாதென...
சின்ன சிரிப்பில்... ஒரு கள்ள சிரிப்பில்...
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்...