படம்: பசங்க
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர், ஸ்ரேயா கோஷல்
வரிகள்: தாமரை
ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலை பாயுதே…..
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே…..
போகச்சொல்லி கால்கள் தள்ள
நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபவமே….
இனி இது தொடர்ந்திடுமே…..
இது தரும் தடம் தடுமாற்றம் ….சுகம்
மழை இன்று வருமா வருமா
குளிர்க்கொஞ்சம் தருமா தருமா
கனவென்னைக் களவாடுதே….
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே…..
கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்
கூறுப்போட்டுக் கொல்லும் இன்பம்
பட பட படவெனவே….
துடித்துடித்திடும் மனமே…
வர வர வரக் கரைத்தாண்டிடுமே
மேலும் சில முறை
உன் குறும்பிலே…. நானே தோற்கிறேன்
உன் மடியிலே என் தலையணை
இருந்தால்…..உறங்குவேன்
ஆணின் மனதிற்குள்ளும்….
பெண்மை இருக்கிறதே
தூங்க வைத்திடவே
நெஞ்சம் துடிக்கிறதே
ஒரு வரி நீ சொல்ல
ஒரு வரி நான் சொல்ல
எழுந்திடும் காதல் காவியம்
அனைவரும் ஈர்க்கும் நாள் வரும்
மழை இன்று வருமா வருமா
குளிர்க்கொஞ்சம் தருமா தருமா
கனவென்னைக் களவாடுதே….
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே…..
கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்
கூறுப்போட்டுக் கொல்லும் இன்பம்
இது முதல் அனுபவமே….
இனி இது தொடர்ந்திடுமே…..
வர வர வரக் கரைத்தாண்டிடுமே…
காற்றில் கலந்து நீ
என் முகத்தினை
எங்கோ மோதினாய்….
பூ மரங்களில்
நீ இருப்பதால்
என் மேல் உதிர்கிறாய்……
ஓ….
தூது அனுப்பிடவே …
நேரம் எனக்கில்லையே…
நினைத்த பொழுதினிலே…
மரணம் எதிரினிலே….
வெயிலிலே ஊர்கோலம்
இதுவரை நாம் போனோம்
நிகழ்கிறதே கார்க்காலமே
நனைந்திடுவோம் நாள்தோறுமே..
ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலை பாயுதே…..
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே…..
ஓ….போகச்சொல்லி கால்கள் தள்ள
நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபவமே….
துடி துடித்திரு மனமே
வர வர வரக் கரைத்தாண்டிடுமே…