படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்
இசை: ஹரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கார்த்திக், க்ரீஷ், நரேஷ் ஐயர்
வரிகள்: தாமரை
கரு கரு விழிகளால் ஒரு கண் மை என்னைக் கடத்துதே
ததும்பிட ததும்பிட சிறு அமுதம் என்னைக் குடிக்குதே
இரவினில் உறங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கையில் ஒரு மின்னன் வந்து சாய்க்க..
நீ... ஒரு மல்லிச் சரமே
நீ... இலை சிந்தும் மரமே
என்... புது வெள்ளிக் குடமே
உன்னைத் தேடும் கண்கள்
ஏய்... நீ தங்கச்சிலையா
வெண்... நுரை பொங்கும் மழையா
மண்... மனம் பின்னும் வலையா
உன்னைத் தேடும் கண்கள்
புது புது வரிகளால் என் கவிதைத் தாளும் நிறையுதே
கனவுகள் கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதே
மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதே
மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ
தாமரை இலை நீர் நீதானா
தனியொரு அன்றில் நீதானா
புயல் தரும் தென்றல் நீதானா புதையல் நீதானா
நீ... ஒரு மல்லிச் சரமே
மண்ணில்... இலை சிந்தும் மரமே
மின்னும்... புது வெள்ளிக் குடமே
உன்னைத் தேடும் கண்கள்
ஏய்... நீ தங்கச்சிலையா
வெள்ளை... நுரை பொங்கும் மழையா
அன்பால்... மனம் பின்னும் வலையா
உன்னைத் தேடும் கண்கள்
ஒரு நாள் ஒரு நாள் என்றே தினமும் போகும்
மறு நாள் வருமா என்றே இரவில் இதயம் சாகும்
பேசும் போதே இன்னும் ஏதோ தேடும்
கையின் ரேகை போலே கள்ளத்தனம் ஓடும்
நீரே இல்லா பாலையிலே இன்று பெய்யும் மழை மழை
உள்ளுக்குள்ளே உச்சுக்கொட்டி
தொடர்ந்திடும் பிழை பிழை
கரு கரு விழிகளால் ஒரு கண் மை என்னைக் கடத்துதே
ததும்பிட ததும்பிட சிறு அமுதம் என்னைக் குடிக்குதே
இரவினில் உறங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கையில் ஒரு மின்னன் வந்து சாய்க்க..
தாமரை இலை நீர் நீதானா
தனியொரு அன்றில் நீதானா
புயல் தரும் தென்றல் நீதானா புதையல் நீதானா
தாமரை இலை நீர் நீதானா
தனியொரு அன்றில் நீதானா
புயல் தரும் தென்றல் நீதானா புதையல் நீதானா
ஒரு மல்லிச்சரமே...