Thursday, August 20, 2009

எனக்கொரு சினேகிதி...


படம்: பிரியமானவளே
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: ஹரிஹரன், மகாலெட்சுமி ஐயர்
வரிகள்: வாலி

எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி
உன் முகம் பார்க்கத் தோன்றினால் பூக்களைப் பார்த்துக்கொள்கிறேன்
பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லிப் பார்க்கிறேன்
(எனக்கொரு...)


மேகமது சேராது வான் மழையும் வாராது
தனிமையில் தவித்தேனே உனை எண்ணி இளைத்தேனே
மேல் இமையும் வாராது கீழ் இமையும் சேராது
உனக்கிது புரியாதா இலக்கணம் தெரியாதா
சம்மதங்கள் உள்ள போதும் வார்த்தையொன்று சொல்ல வேண்டும்
வார்த்தை வந்து சேரும் போது நாணம் என்னை கட்டிப் போடும்
மௌனம் ஒன்று போதும் போதுமே கண்கள் பேசிவிடுமே
(எனக்கொரு...)


கைவளையல் குலுங்காமல் கால் கொலுசு சிணுங்காமல்
அணைப்பது சுகமாகும் அது ஒரு தவமாகும்
மோகம் ஒரு பூப்போல தீண்டியதும் தீப்போல
கனவுகள் ஒரு கோடி நீ கொடு என் தோழி
உன்னைத் தந்து என்னை நீயும் தாங்கிக்கொண்டு நாட்களாச்சு
பூவைத் தொட்ட பின்புதானே முட்கள் கூட பூக்கள் ஆச்சு
விரல்கள் கொண்டு நீயும் மீட்டினால் விறகும் வீணையாகும்
(எனக்கொரு...)