படம்: இருவர்
இசை: AR ரகுமான்
பாடியவர்கள்: அரவிந்த சாமி, டொமினிக்
வரிகள்: வைரமுத்து
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே!
தொண்ணூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம்தான்
எண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி!
பார்வையிலே சில நிமிடம் பயத்தோடு சில நிமிடம்!
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்!
இலக்கணமே பாராமல் எல்லா இடங்களிலும்
முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்!
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே!
எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை!
அது இரவா அது பகலா அது பற்றி அறியவில்லை!
யார் தொடங்க யார் முடிக்க ஒரு வழியும் தோன்றவில்லை!
இருவருமே தொடங்கிவிட்டோம் இதுவரைக்கும் கேள்வியில்லை!
அச்சம் களைந்தேன் ஆசையினை நீ அணிந்தாய்!
ஆடை களைந்தேன் வெட்கத்த நீ அணிந்தாய்!
கண்ட திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியிலே அழுத கண்ணீர் கண்ணில் இன்னும் ஒட்டுதடி!
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே!
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே!