Friday, August 28, 2009

நீயில்லை நிலவில்லை...


படம்: பூச்சூடவா
இசை: தேவா
பாடியவர்கள்: ஹரிஹரன்
வரிகள்:


நீயில்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை (2)
நீ தானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீர் ஆகின்றாய்
(நீயில்லை நிலவில்லை...)


உன் பேரை நான் எழுதி என்னை நான் வாசித்தேன்
எங்கேயோ எனைத்தேடி உன்னில் தான் சந்தித்தேன்.
காதலே…. காதலே…. ஊஞ்சலாய் ஆனதே
நான் அங்கும் இங்கும் அலைந்திட தானா சொல்…
(நீயில்லை நிலவில்லை...)


பகலின்றி வாழ்ந்திருந்தேன் சூரியனை தந்தாயே
நிறமின்றி வாழ்ந்திருந்தேன் வானவில்லை தந்தாயே
கூந்தலில் சூடினாய் வாடுமுன் வீசினாய்
அடி காதலும் பூவை போன்றது தானா சொல்…
(நீயில்லை நிலவில்லை...)