படம்: அதே நேரம் அதே இடம்
இசை: பிரேம்ஜி
பாடியவர்கள்: ஹரிணி, திப்பு, ஹரிச்சரன்
வரிகள்: லலிதானந்த்
முதல் முறை உன்னைப் பார்த்த போதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்தில் உன் முகம் தான் பிடிக்கிறதே
கனவினில் உன்னைப் பார்க்கும் போதும்
அருகினில் என்னைக் காண வேண்டும்
உன்னருகே நான் இருந்தால சிலிர்கிறதே
நீ விளையாட்டுப் பிள்ளை – உனக்கு நான்
தலையாட்டும் பொம்மை
எனை தாயை போல தாங்க வேண்டும்
மடியினிலே
(முதல் முறை...)
நீ அருகில் தோன்றும் நேரமே
வானிலையும் மாறிப் போகுதே
நீயும் நினைத்தால்
வானவில் வந்து விடுமே
உன் மனதில் தோன்றும் வார்த்தையே
என் உதடும் கூற வேண்டுமே
உன்னை நினைத்தால்
வாழ்விலே என்றும் சுகமே
உன்னுடன் இருப்பதால்
உயிருடன் இருக்கிறேன்
உனக்கென வேண்டுமா
உயிரையும் தருகிறேன்
நான் உன் மூச்சில் வாழும்
வரமது எந்நாளும் போதும்
நீ சூடும் பூவும் வாடும் போது
வலித்திடுமே
(முதல் முறை....)
நீ நடந்து போகும் வேளையில்
கால் வலிக்கும் என்று கலங்குதே
தோளில் சுமந்தே தாங்குவேன்
உன்னை தினமே
தோளிரண்டில் என்னை தூக்கினால்
நாள்கணக்கில் அங்கு தூங்குவேன்
நானும் உனையே தாங்குவேன்
நெஞ்சில் நினைத்தே
சூரியன் உதிப்பதே
உன் முகம் காணவே
பூமியில் பிறந்ததே
உன்னுடன் வாழவே
அந்த மழை மேகம் யாவும்
இறங்கியே உனைத்தீண்ட ஏங்கும்
இனி கோயில் தேடி போக மாட்டேன்
தெய்வமும் நீ
(முதல் முறை....)