Sunday, August 16, 2009

சங்கீத ஸ்வரங்கள்....


படம்: அழகன்
இசை: மரகதமணி
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சந்தியா
வரிகள்: புலமைப்பித்தன்

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்லே பகலா எனக்கும் மயக்கம்


நெஞ்சில் என்னவோ நெனச்சேன்
நானும்தான் நெனச்சேன்
ஞாபகம் வரல
யோசிச்சா தெரியும்
யோசன வரல
தூங்கினா விளங்கும்
தூக்கம்தான் வரல
பாடுறேன் மெதுவா உறங்கு
(சங்கீத ஸ்வரங்கள்...)


எந்தெந்த இடங்கள் தொட்டால் ஸ்வரங்கள்
துள்ளும் சுகங்கள் கொஞ்சம் நீ சொல்லித்தா
சொர்க்கத்தில் இருந்து யாரோ எழுதும்
காதல் கடிதம் இன்றுதான் வந்தது
சொர்க்கம் விண்ணிலே திறக்க
நாயகன் ஒருவன்
நாயகி ஒருத்தி
தேன் மழை பொழிய
பூவுடல் நனைய
காமனின் சபையில்
காதலின் சுவையில்
பாடிடும் கவிதை சுகம்தான்!
(சங்கீத ஸ்வரங்கள்...)