படம்: சென்னை 600028
இசை: யுவன்சங்கர் ராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்பிரமணியம், சித்ரா
வரிகள்: வாலி
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி
(யாரோ...)
காதல் வரம் நான் வாங்க
கடைக் கண்கள் நீ வீச
கொக்கைப் போல நாள்தோறும்
ஒற்றைக் காலில் நின்றேன் கண்மணி
(யாரோ...)
ஊரை வெல்லும் தோகை நானும்
உன்னால் இன்று தோற்றுப் போனேன்
கண்ணால் யுத்தமே - நீ
செய்தாய் நித்தமே
ஓ.. நின்றாய் இங்கு மின்னல் கீற்றாய்
நித்தம் வாங்கும் மூச்சுக் காற்றாய்
உன்னை சூழ்கிறேன் - நான்
உன்னை சூழ்கிறேன்
காற்றில் வைத்த சூடம் போலே
காதல் தீர்ந்து போகாது
உன்னை நீங்கி உஷ்ணம் தாங்கி
என்னால் வாழ ஆகாது
அன்பே வா.... ஹே!
(யாரோ...)
உந்தன் ஆடை காயப்போடும்
உங்கள் வீட்டுக் கம்பிக் கொடியாய்
என்னை எண்ணினேன் - நான்
தவம் பண்ணினேன் ஆ ஹா ஹா..
கெட்டக் கெட்ட வார்த்தை சொல்லி
கிட்டக் கிட்ட வந்தாய் துள்ளி
எட்டி போய் விடு - இல்லை
ஏதோ ஆய்விடும்
காதல் கொண்டு பேசும் போதும்
சென்னைத் தமிழும் செந்தேன்தான்
ஆசை வெள்ளம் பாயும் போது
வங்கக் கடலும் வாய்க்கால் தான்
அன்பே வா... ஹா...
(யாரோ...)