Tuesday, August 18, 2009

முதல் மழை என்னை...


படம்: பீமா
இசை: ஹரிஷ் ஜெயராஜ்
பாடியவர்கள்: R பிரசன்னா, ஹரிஹரன், மகதி
வரிகள்: நா முத்துக்குமார்

முதல் மழை என்னை நனைத்ததே
முதல் முறை ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே...
இதயமும் … ஹோய்
இதமாய் மிதந்ததே….
(முதல் மழை...)


கனவோடுதானடி நீ தோன்றினாய்
கண்களால் உன்னைப் படம் எடுத்தேன்
என் வாசலில் நேற்று உன் வாசனை
நீ நின்ற இடம் இன்று உணர்ந்தேன்

எதுவும் புரியா புதுக்கவிதை
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்
கையை மீறும் ஒரு குடையாய்
காற்றோடுதான் நானும் பறந்தேன் - மழைக்
காற்றோடுதான் நானும் பறந்தேன்
(முதல் மழை...)


ஓர்நாள் உன்னை நானும் காணாவிட்டால்
என்வாழ்வில் அந்த நாளே இல்லை
ஓ…ஓர் நாள் உன்னை நானும் பார்த்தே விட்டால்
அந்நாளில் நீளம் போதவில்லை

இரவும் பகலும் ஒரு மயக்கம்
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்
உயிருன்னுள்ளே உந்தன் நெருக்கம்
இருந்தாலுமே என்றும் இருக்கும் - நான்
இருந்தாலுமே என்றும் இருக்கும்.

பெயரே தெரியாத பறவை அழைத்ததே…

இதயமும்…ஹோய்….இதமாய் மிதந்ததே…