Wednesday, December 30, 2009

நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி...


படம்: ஹேராம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஆஷா போஸ்லே, ஹரிஹரன்
வரிகள்:

நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி

நான் என்ற சொல் இனி வேண்டாம்
நீ என்பதே இனி நான்தான்
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை
இதுப்போல் வேறெங்கும் சொர்கமில்லை
உயிரே வா

நாடகம் முடிந்த பின்னாலும்
நடிப்பின்னும் தொடர்வது என்ன
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே
உயிரே வா
(நீ பார்த்த..)

Monday, December 28, 2009

வாசமில்லா மலரிது...


படம்:
இசை:
பாடியவர்கள்:
வரிகள்:

வாசமில்லா மலரிது
வசந்தத்தைத் தேடுது
வாசமில்லா மலரிது
வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது
மீனாட்சியைத் தேடுது

ஏதேதோ ராகம்
எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல்
தலை வைத்து ஓடும்
(வாசமில்லா மலரிது...)


பாட்டுக்கொரு ராகம்
ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை
நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை
சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை
கலைமகள் போலே
மீட்டி வரும் வீணை
சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை
கலைமகள் போலே
(வாசமில்லா மலரிது...)


என்ன சுகம் கண்டாய்
இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை
ரதியவள் மேலே
வஞ்சியவள் உன்னை
எண்ணவி்ல்லை என்றும்
உனக்கேன் ஆசை
மன்மதன் போலே
வஞ்சியவள் உன்னை
எண்ணவி்ல்லை என்றும்
உனக்கேன் ஆசை
மன்மதன் போலே
(வாசமில்லா மலரிது...)


மாதங்களை எண்ண
பன்னிரெண்டு வரலாம்
உனக்கேன் ஆசை
மேலொன்று கூட்ட
மாதுதன்னை அறிய
கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை
உறவென்றும் நாட
மாதுதன்னை அறிய
கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை
உறவென்றும் நாட
(வாசமில்லா மலரிது...)
(வாசமில்லா மலரிது...)

Sunday, December 27, 2009

காதல் ரோஜாவே...


படம்: ரோஜா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்:
வரிகள்: வைரமுத்து

காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி
கண்ணே
கண்ணுக்குள் நீதான்
கண்ணீரில் நீதான்
கண் மூடிப் பார்த்தால்
நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ
ஏதானதோ
சொல்! சொல்!
(காதல் ரோஜாவே...)


தென்றல் என்னைத் தீண்டினால்
சேலைத் தீண்டும் ஞாபகம்
சின்னப் பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடைப் பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் இரண்டும் சேர்கையில்
மோகம் கொண்ட ஞாபகம்
வாயில்லாமல் போனால்
வார்த்தை இல்லை பெண்ணே
நீயில்லாமல் போனால்
வாழ்க்கை இல்லை கண்ணே
முள்ளோடுதான் முத்தங்களா
சொல்! சொல்!
(காதல் ரோஜாவே...)


வீசுகின்ற தென்றலே
வேலை இல்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா
பெண்மை இல்லை ஓய்ந்துப் போ
பூ வளர்த்த தோட்டமே
கூந்தல் இல்லை தீர்ந்துப் போ
பூமி பார்க்கும் வானமே
புள்ளியாகத் தேய்ந்துப் போ
பாவை இல்லை பாவை
தேவை என்னத் தேவை
ஜீவன் போன பின்னே
சேவை என்ன சேவை
முள்ளோடுதான் முத்தங்களா
சொல்! சொல்!
(காதல் ரோஜாவே...)

Saturday, December 26, 2009

கண்ணீரே கண்ணீரே...


படம்: உயிரே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்:
வரிகள்: வைரமுத்து

இரு பூக்கள் கிளை மேலே
ஒரு புயலோ மலை மேலே
உயிர் ஆடும் திகிலாலே
என் வாழ்வின் ஓரம் வந்தாயே
செந்தேனே...
இரு பூக்கள் கிளை மேலே
ஒரு புயலோ மலை மேலே
உயிர் ஆடும் திகிலாலே
என் வாழ்வின் ஓரம் வந்தாயே
செந்தேனே...

கண்ணீரே கண்ணீரே
சந்தோஷ கண்ணீரே
கண்ணீரே...
தேடித் தேடித் தேய்ந்தேனே
மீண்டும் கண்முன் கண்டேனே
பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே
பேசாய் பெண்ணே
கண்ணே கண்ணே
காணாய் கண்ணே
கண்ணீரே
(கண்ணீரே கண்ணீரே...)


உன் பார்வை பொய்தானா
பெண்ணென்றால் திரைதானா
பெண் நெஞ்சே சிறைதானா
சரிதானா...
பெண் நெஞ்சில் மோகம் உண்டு
அதில் பருவத் தாபம் உண்டு
பேராசைத்தீயும் உண்டு
ஏன் உன்னை ஒளித்தாய் இன்று
புதிர் போட்ட பெண்ணே நில் நில்
பதில் தோன்றவில்லை சொல் சொல்

கல்லொன்று தடைசெய்த போதும்
புல்லொன்று புதுவேர்கள் போடும்
நம் காதல் அது போல மீறும்
கல்லொன்று தடைசெய்த போதும்
புல்லொன்று புதுவேர்கள் போடும்
நம் காதல் அது போல மீறும்
கண்ணில் கண்ணே கண்ணீர் இன்ப கண்ணீரே...
(தேடித் தேடித் தேய்ந்தேனே...)


பால் நதியே நீ எங்கே
வரும் வழியில் மறைந்தாயோ
பல தடைகள் கடந்தாயோ
சொல் கண்ணே...
பேரன்பே உந்தன் நினைவு
என் கண்ணைச் சுற்றும் கனவு
இது உயிரைத் திருடும் உறவு
உன் துன்பம் என்பது வரவு
ஏ மர்ம ராணி நில் நில்
ஒரு மௌளன வார்த்தை சொல் சொல்

உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்
உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்
கண்ணில் கண்ணே கண்ணீர் இன்ப கண்ணீரே
(கண்ணீரே கண்ணீரே...)

காதல் வந்தால்...


படம்: இயற்கை
இசை:
பாடியவர்கள்:
வரிகள்:

காதல் வந்தால்
சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால்
வருகிறேன்

என் கண்ணீர் வழியே
உயிரும் வழிய
கரையில் கரைந்து
கிடக்கிறேன்

சுட்ட மண்ணிலே மீனாக
மனம் வெட்ட வெளியிலே வாடுதடி
சுட்ட மண்ணிலே மீனாக
மனம் வெட்ட வெளியிலே வாடுதடி

கண்ணீர் கலந்து
கண்ணீர் கலந்து
கடல் நீர் மட்டும்
கூடுதடி...
(காதல் வந்தால்...)


உயிரைத் தவிர சொந்தம் இல்லையே
காதலிக்கும் முன்பு
இந்த உலகே எந்தன் சொந்தம் ஆனதே
காதல் வந்த பின்பு

Babe! Tell me you love me, It's never late, Don't hesitate...!

சாவை அழைத்துக் கடிதம் போட்டேன்
காதலிக்கும் முன்பு
ஒரு சாவைப் புதைக்க சக்தி கேட்கிறேன்
காதல் வந்த பின்பு

உன்னால் என் கடல் அலை உறங்கவே இல்லை
உன்னால் என் நிலவுக்கு உடல் நலம் இல்லை
கடல் துயில் கொள்வதும் நிலா குணம் கொள்வதும்
நான் உயிர் வாழ்வதும் உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம் தான் என் உயிரைக் கொல்லுதடி
கொல்லுதடி
(காதல் வந்தால்...)


பிறந்த மண்ணை அள்ளித் தின்றேன்
உன்னைக் காணும் முன்பு
நீ நடந்த மண்ணை அள்ளித் தின்றேன்
உன்னைக் கண்ட பின்பு

அன்னை தந்தை கண்டதில்லை நான்
கண் திறந்த பின்பு
என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன்
உன்னைக் கண்ட பின்பு

பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை
அதற்குள் அது முடிவதா? விளங்கவே இல்லை
நான் கரையாவதும், இல்லை நுரையாவதும்
வளர் பிறையாவதும், உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம் தான் என் உயிரைக் கொல்லுதடி
கொல்லுதடி

சக்கரை நிலவே...


படம்: யூத்
இசை:
பாடியவர்கள்: ஹாரிஷ் ராகவேந்திரா
வரிகள்: வைரமுத்து

சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை
நீ இல்லையேல்
(சக்கரை நிலவே...)

மனம் பச்சைத் தண்ணிதான் பெண்ணே
அதை பற்ற வைத்ததுன் கண்ணே
என் வாழ்க்கை என்னும் காட்டை எரித்து
குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே

கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா
(சக்கரை நிலவே...)


காதல் என்ற ஒன்று
அது கடவுள் போல
உணரத்தானே முடியும்
அதில் உருவம் இல்லை

காயம் கண்ட இதயம்
ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே
சொல்ல அதில் வார்த்தை இல்லை

அன்பே உன் புன்னகை எல்லாம்
அடி நெஞ்சில் சேமித்தேன்
கண்ணே என் புன்னகை எல்லாம்
கண்ணீராய் உருகியதே

வெள்ளை சிரிப்புகள் உன் தவறா
அதில் கொள்ளை போனது என் தவறா
பிரிந்து சென்றது உன் தவறா
நான் புரிந்துக் கொண்டது என் தவறா

ஆண் கண்ணீர் பருகும்
பெண்ணின் இதயம்
சதை அல்ல
கல்லின் சுவரா
(கவிதை பாடின...)


நவம்பர் மாத மழையில்
நான் நனைவேன் என்றேன்
எனக்கும் கூட நனைதல்
மிக பிடிக்கும் என்றாய்

மொட்டை மாடி நிலவில்
நான் குளிப்பேன் என்றேன்
எனக்கும் அந்த குளியல்
மிக பிடிக்கும் என்றாய்

சுகமான குரல் யார் என்றால்
சுசீலாவின் குரல் என்றேன்
எனக்கும் அந்த குரலில் ஏதோ
மயக்கம் என நீ சொன்னாய்

கண்கள் மூடிய புத்த சிலை
என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்
தயக்கம் என்பது சிறிதும் இன்றி
அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்

அடி எனக்கும் உனக்கும்
எல்லாம் பிடிக்க
என்னை ஏன்
பிடிக்காதென்றாய்
(கவிதை பாடின...)

Friday, December 25, 2009

எங்கே எனது கவிதை...


படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்:
வரிகள்: வைரமுத்து

பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த
நெஞ்சம் நெஞ்சம் மின்னும்


எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

விழியில் கரைந்துவிட்டதா
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித் தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்
(எங்கே எனது கவிதை...)


மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்
தொலைந்த முகத்தை மனம் தேடுதே
வெயிலில் தாரொழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மனம் வாடுதே

மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை
உருகி உருகி மனம் தேடுதே

அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்
அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்

விரை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த
நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

(எங்கே எனது கவிதை...)


ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட
ஒரே தொடுதல் மனம் வேண்டுதே
முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது
நித்தம் வேண்டும் என்று வேண்டுதே
வேர்வை பூத்த உந்த சட்டை வாசம்
இன்று ஓட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே
கேட்குதே...

பாறையில் செய்தது என் மனம் என்று
தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்

(எங்கே எனது கவிதை...)

கண்ணாமூச்சி ஏனடா...


படம்:
இசை: ரஹ்மான்
பாடியவர்கள்:
வரிகள்: வைரமுத்து

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா

அந்த நதியின் கரையை நான் கேட்டேன்
அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன்
அந்த நதியின் கரையை நான் கேட்டேன்
அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன்

வான் வெளியைக் கேட்டேன்
விடையே இல்லை
வான் வெளியைக் கேட்டேன்
விடையே இல்லை

இறுதியில் உன்னைக் கண்டேன்
இருதயப் பூவில் கண்டேன்
இறுதியில் உன்னைக் கண்டேன்
இருதயப் பூவில் கண்டேன்
(கண்ணாமூச்சி ...)


என் மனம் உனக்கொரு
விளையாட்டு பொம்மையா
என் மனம் உனக்கொரு
விளையாட்டு பொம்மையா
எனக்கென உணர்ச்சிகள்
தனியாக இல்லையா

நெஞ்சின் அலை உறங்காது
உன் இதழ் கொண்டு வாய் மூட வா
என் கண்ணா
உன் இதழ் கொண்டு வாய் மூட வா
என் கண்ணா
உன் இமை கொண்டு
விழி மூட வா
உன் உடல்தான்
என் உடையல்லவா

பாற்கடலில் ஆடிய பின்னும்
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்
பாற்கடலில் ஆடிய பின்னும்
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்

என் நெஞ்சில் கூடியே
நிறம் மாறவா
என்னுயிரில் நீ வந்து சேர்க
உதடுகள் ஈரமாய் வாழ்க
கலந்திட வா
(கண்ணாமூச்சி ...)


வான் மழை விழும்போது
மலைகொண்டு காத்தாய்
வான் மழை விழும்போது
மலைகொண்டு காத்தாய்
கண் மழை விழும்போது
எதிலென்னைக் காப்பாய்

பூவின் கண்ணீரை ரசிப்பாய்
நான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா
அதை நீ காணக் கண்ணில்லையா
உன் கனவுகளில் நானில்லையா
தினம் ஊசலாடுதென் மனசு
அட ஊமையல்ல என் கொலுசு

என் உள் மூச்சிலே
உயிர் வீங்குதே
என்னுயிர் துடிக்காமலே
காப்பது உன் தீண்டலே
உயிர் தர வா
(கண்ணாமூச்சி ...)

என்னை காணவில்லையே...


படம்: காதல் தேசம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், ராஃபி, OS அருண்
வரிகள்: வைரமுத்து

அன்பே... அன்பே.... அன்பே.. அன்பே....

என்னை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப்போனதோ உன்னோடு அன்பே..
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயென புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே.. அன்பே..

நடைப்போடும் பூங்காற்றே பூங்காற்றே
வா வா
என் வாசல்வா
வந்தால் வாழ்வேனே நான்
(என்னை காணவில்லையே...)


ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
அன்பே உன் பேரைச் சொல்லித்தான்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்

நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான்
உன் சுவாசக் காற்றில் நான்..
(என்னை காணவில்லையே...)


நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதலென்றால்
(என்னை காணவில்லையே...)

காதல் வளர்த்தேன்....


படம்: மன்மதன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: KK
வரிகள்: நா முத்துகுமார்

காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் - என்
உசிருகுள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்

ஏ… இதயத்தின் உள்ளே பெண்ணெ நான்
செடி ஒண்ணு தான் வெச்சு வளர்த்தேன்
இன்று அதில் பூவாய் நீயே தான்
பூத்தவுடனே காதல் வளர்த்தேன்

ஏ புள்ள புள்ள உன்னை எங்க புடிச்சேன்
ஏ புள்ள புள்ள அதை கண்டுபுடிச்சேன்
ஏ புள்ள புள்ள உன்னை கண்ணில் புடிச்சேன்
ஏ புள்ள புள்ள உன்னை நெஞ்சில் வெதச்சேன்
ஏ புள்ள புள்ள...
(காதல் வளர்த்தேன்...)


பூவின் முகவரி காற்று அறியுமே
என்னை உன் மனம் அறியாதா
பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள்
உன்னை பார்த்ததும் பொழியாதா
பல கோடி பெண்ண்கள்தான்
பூமியிலே வாழலாம் - ஒரு
பார்வையால் மனதை
பறித்து சென்றவள் நீயடி
உனக்கெனவே காத்திருந்தாலே
கால் அடியில் வேர்கள் முழைக்கும்
காதலில் வழியும் இன்பம்தானே… தானே…
உனது பேரெழுதி பக்கத்திலே
எனது பேரை நானும் எழுதி வெச்சேன் - அது
மழையில் அழியாமல் குடை புடிச்சேன்
மழை விட்டும் நான் நனைஞ்சேன்..
(ஏ புள்ள புள்ள…)
(காதல் வளர்த்தேன்…)


உன்னை தவிர இங்கே எனக்கு யாரடி
உனது நிழலிலே ஓய்வெடுப்பேன்
உனது சுவாசத்தின் சூடு தீண்டினால்
மரணம் வந்தும் நான் உயிர்த்தெழுவேன்
உன் முகத்தை பார்க்கவே
என் விழிகள் வாழுதே
பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறேன் நானடி
உடல் பொருள் ஆவி அனைத்தும்
உனக்கெனவே தருவேன் பெண்ணெ
உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே… கண்ணே…
தந்தை அன்பு அது பிறக்கும் வரை
தாயின் அன்பு அது வளரும் வரை
தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ
உயிரோடு வாழும் வரை…
அடியே ஏ புள்ள புள்ள…
(காதல் வளர்த்தேன்…)

Wednesday, December 23, 2009

மனமே மனமே தடுமாறும் மனமே...


படம்: ரோஜாவனம்
இசை:
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்:

மனமே மனமே
தடுமாறும் மனமே
உள்ளுக்குள் இருந்தே
உயிர் கொல்லும் மனமே

பெண்ணைப் பார்க்கும் போது
நீ சிறகை விரிக்காதே
பிரிந்து போன பிறகு
நீ சிதையும் வளர்க்காதே
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு
(மனமே மனமே....)


காதல் என்ற மாத்திரைக்கு
எப்போதும் இரண்டு குணம்
போட்டுக் கொண்டால்
போதையைக் கொடுக்கும்
போகப் போகத்
தூக்கத்தைக் கெடுக்கும்
காதல் என்ற யாத்திரைக்கு
எப்போதும் இரண்டு வழி
வந்த வழி வெளிச்சத்தில் ஒளிக்கும்
போகும் வழியோ இருளுக்குள் இருக்கும்
கண்மூடினால் தூக்கம் இல்லை
கண்கள் திறந்தால் பார்வையும் இல்லை
ஆல விருட்சம்போல வளருது
அழகுப் பெண்ணின் நினைப்பு
வெட்டி எறிந்து பார்த்தேன்
மறுபடி வேரில் என்ன துளிர்ப்பு
என் நெஞ்சமே பகையானதே
உயிர்வாழ்வதே சுமையானதே
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு
(மனமே மனமே....)


காதல் தந்த நினைவுகளை
கழற்றி எறிய முடியவில்லை
அலைகள் வந்து அடிப்பதனாலே
கரைகள் எழந்து ஓடுவதில்லை
என்னை மறக்க நினைக்கையிலும்
அவளை மறக்க முடியவில்லை
உலைமூட மூடிகள் உண்டு
அலைகடல் மூடிடமூடிகள் இல்லை
காதலின் கையில் பூக்களுமுண்டு
காதலின் கையில் கத்தியுமுண்டு
பூக்கள் கொண்டுவந்து நீ வாசம் வீசுவாயா
கத்தி கொண்டுவந்து நீ கழுத்தில் வீசுவாயா
என் வாழ்விலே என்ன சோதனை
நான் வாழ்வதில் என்ன வேதனை
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு
(மனமே மனமே....)

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்...


படம்: அமர்க்களம்
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சுஜாதா
வரிகள்: வைரமுத்து

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்

உயிரைக்கிள்ளாத உறவைக் கேட்டேன்
ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன்
வலிகள் செய்யாத வார்த்தைக் கேட்டேன்
வயதுக்குச் சரியான வாழ்க்கைக் கேட்டேன்
இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்
இளமை கெடாத மோகம் கேட்டேன்
பறந்து பறந்து நேசம் கேட்டேன்
பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்
புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன்
பூவின் மடியில் படுக்கைக் கேட்டேன்
தானே உறங்கும் விழியைக் கேட்டேன்
தலையைக் கோதும் விரலைக் கேட்டேன்
நிலவில் நனையும் சோலைக் கேட்டேன்
நீலக் குயிலின் பாடல் கேட்டேன்
நடந்து போக நதிக்கரை கேட்டேன்
கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன்
தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன்
எட்டிப் பிடிக்க விண்மீன் கேட்டேன்
துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்
தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன்
பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்
பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்
மனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்
பறவைக்கெல்லாம் தாய் மொழி கேட்டேன்
உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்
ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்
வானம் முழுக்க நிலவைக் கேட்டேன்
வாழும்போதே சுவர்க்கம் கேட்டேன்
எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன்
எரியும் தீயாய் கவிதை கேட்டேன்
கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்
காமம் கடந்த யோகம் கேட்டேன்
சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்
சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்
உச்சந்தலைமேல் மழையைக் கேட்டேன்
உள்ளங்காலில் நதியைக் கேட்டேன்
பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன்
பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன்
நன்றி கெடாத நட்பைக் கேட்டேன்
நடுங்கவிடாத செல்வம் கேட்டேன்
மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன்
மழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன்
நிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன்
நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன்
விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன்
அழுதால் மழை போல் அழவே கேட்டேன்
ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்
எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்
பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்
சூரியன் போல் ஒரு பனித்துளி கேட்டேன்
ராஜராஜனின் வாளைக் கேட்டேன்
வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்
பாரதியாரின் சொல்லைக் கேட்டேன்
பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்
மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன்
மதுரை மீனாக்ஷி கிளியைக் கேட்டேன்
சொந்த உழைப்பில் சோறைக் கேட்டேன்
தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன்
மழையைப் போன்ற பொறுமையைக் கேட்டேன்
புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன்
புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்
இடியைத் தாங்கும் துணிவைக் கேட்டேன்
இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்
துரோகம் தாங்கும் வலிமை கேட்டேன்
தொலைந்துவிடாத பொறுமையைக் கேட்டேன்
சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்
சொன்னால் சாகும் வேகம் கேட்டேன்
கயவரை அறியும் கண்கள் கேட்டேன்
காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்
சின்னச் சின்ன தோல்விகள் கேட்டேன்
சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்
மூடியில்லாத முகங்கள் கேட்டேன்
போலியில்லாத புன்னகை கேட்டேன்
தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன்
தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்
ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன்
ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்
காசே வேண்டாம் கருணை கேட்டேன்
தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன்
கூட்டுக்கிளிபோல் வாழக் கேட்டேன்
குறைந்தபட்ச அன்பைக் கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
இதிலே எதுவும் நடக்கவில்லை
வாழ்வே வாழ்வே வேண்டாமென்று
மரணம் மரணம் மரணம் கேட்டேன்

என் காதலே என் காதலே...


படம்: டூயட்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரண்டைக் கேட்கிறாய்

சிலுவைகள் சிறகுகள்
ரெண்டில் என்ன தரப்போகிறாய்
கிள்ளுவதைக் கிள்ளிவிட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்
(என் காதலே...)


காதலே நீ பூவெறிந்தால்
எந்த மலையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல்லெறிந்தால்
எந்தக் கடலும் கொஞ்சம் கலங்கும்

இனி மீழ்வதா இல்லை வீழ்வதா
உயிர் வாழ்வதா இல்லை போவதா
அமுதென்பதா விஷமென்பதா
இல்லை அமுத விஷமென்பதா
(என் காதலே...)


காதலே உன் காலடியில்
நான் விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ மூடிக் கொண்டால்
நான் குலுங்கிக் குலுங்கு அழுதேன்

இது மாற்றமா தடுமாற்றமா
என் நெஞ்சிலே பனி மூட்டமா
நீ தோழியா இல்லை எதிரியா
என்று தினமும் போராட்டமா
(என் காதலே...)

Wednesday, December 2, 2009

விழியே விழியே பேசும் விழியே...


படம்: ஈரம்
இசை: தமன்
பாடியவர்கள்: ரஞ்சித்
வரிகள்:

விழியே விழியே பேசும் விழியே
ஒரு பார்வை பார்த்தாய்
மழையே மழையே நெஞ்சில் மழையே

தனியே தனியே வாழ்ந்தேன் தனியே
நான் மண்ணின் மேலே
இனிமே இனிமே நீதான் துணையே

மழையே மழையே தூவும் மழையே
இது காதல் தானா
தனியே தனியே நனைந்தேன் மழையே

மனமே மனமே தீயாய் கொதிக்கும்
ஒரு காய்ச்சல் போலே
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே
(மழையே..)


ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கிறேன்
ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்

ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கிறேன்
ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்
உல்லா ஹ உல்லா ஹ ஓ
உல்லா ஹ உல்லா ஹ ஓ

சொல்லாமல் சொல்லாமல் சொல்வாய்
செல்லாமல் செல்லாமல் செல்வாய்


உன் ஆடை பட்டாலே ஒரு சாரல் அடிக்கிறது
உன் ஓரப் புன்னகையாய் பெரும் தூறல் வருகிறது
உன் முகத்தில் அசையும் முடி

இலைத் துளியாய் நனைக்கிறது
உன் கைகள் தீண்டுவதால்
அடை மழையே பொழிகிறது

போதும் போ நீ போ என் கண்கள் வலிக்கிறது
ஓடிப் போ நீ போ என் உலகம் உருகிறது

(விழியே..)

Tuesday, December 1, 2009

அன்புள்ள மான் விழியே...


படம்: குழந்தையும் தெய்வமும்
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன், P சுசீலா
வரிகள்: கண்ணதாசன்

அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர் காதலில் ஓர் கவிதை

அன்புள்ள ம‌ன்ன‌வ‌னே
ஆசையில் ஓர் கடிதம்
அதை கைகளில் எழுதவில்லை
இரு கண்களில் எழுதி வந்தேன் !


நலம் நலம்தானா முல்லை மலரே
சுகம் சுகம்தானா முத்துச்சுடரே
நலம் நலம்தானா முல்லை மலரே
சுகம் சுகம்தானா முத்துச்சுடரே

இளைய கன்னியின் இடை மெலிந்ததோ
எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ
வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ
வாடைக் காற்றிலே வாடி நின்றதோ
(அன்புள்ள மான் விழியே...)


நலம் நலம்தானே நீ இருந்தால்
சுகம் சுகம்தானே நினைவிருந்தால்
நலம் நலம்தானே நீ இருந்தால்
சுகம் சுகம்தானே நினைவிருந்தால்

இடை மெலிந்தது இயற்கை அல்லவா
நடை தளர்ந்தது நாணம் அல்லவா
வண்ணப் பூங்கொடி பெண்மை அல்லவா
வாட வைத்ததும் உண்மை அல்லவா

(அன்புள்ள ம‌ன்ன‌வ‌னே...)
(அன்புள்ள மான் விழியே...)

அன்புள்ள மான் விழியே...(R)


படம்: ஜக்குபாய்
இசை: ர(f)பி
பாடியவர்கள்: ர(f)பி, மகேஸ்வரி
வரிகள்: கண்ணதாசன்

அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர் காதலில் ஓர் கவிதை

அன்புள்ள ம‌ன்ன‌வ‌னே
ஆசையில் ஓர் கடிதம்
அதை கைகளில் எழுதவில்லை
இரு கண்களில் எழுதி வந்தேன் !


நலம் நலம்தானா முல்லை மலரே
சுகம் சுகம்தானா முத்துச்சுடரே
நலம் நலம்தானா முல்லை மலரே
சுகம் சுகம்தானா முத்துச்சுடரே

இளைய கன்னியின் இடை மெலிந்ததோ
எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ
வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ
வாடைக் காற்றிலே வாடி நின்றதோ
(அன்புள்ள மான் விழியே...)


நலம் நலம்தானே நீ இருந்தால்
சுகம் சுகம்தானே நினைவிருந்தால்
நலம் நலம்தானே நீ இருந்தால்
சுகம் சுகம்தானே நினைவிருந்தால்

இடை மெலிந்தது இயற்கை அல்லவா
நடை தளர்ந்தது நாணம் அல்லவா
வண்ணப் பூங்கொடி பெண்மை அல்லவா
வாட வைத்ததும் உண்மை அல்லவா

(அன்புள்ள ம‌ன்ன‌வ‌னே...)
(அன்புள்ள மான் விழியே...)

Sunday, November 29, 2009

என் நெஞ்சில் தூங்கவா...


படம்: என்னைத் தாலாட்ட வருவாளா
இசை:
பாடியவர்கள்: ஹரிஹரன், சுஜாதா
வரிகள்:

என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
வீட்டில் யாரும் இல்லை
வெளியில் யாரும் இல்லை
ஊரில் ஒரு ஓசை இல்லை
பால் போல வா வா
பள்ளி கொள்ள நீ வா


என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
என் நெஞ்சில் தூங்கவா நிலாவே


விண்மீணும் மேகங்களும் கண் தூங்கும் போது
வாய் முத்தம் நீ சிந்தவா வாய்ப்புள்ள போது
விண்மீணும் மேகங்களும் கண் தூங்கும் போது
வாய் முத்தம் நீ சிந்த வா வாய்ப்புள்ள போது
அடி நெஞ்சு தள்ளாடியே அலைபாயும் போது
தலைசாய்வதேது..


என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
என் நெஞ்சில் தூங்கவா நிலாவே


நான் உன்னை பார்த்துப் பார்த்தே தேய்கின்றேன்
முகில் என்னும் ஆடை கொண்டு மூடினேன்
நான் உன்னை பார்த்துப் பார்த்தே தேய்கின்றேன்
முகில் என்னும் ஆடை கொண்டு மூடினேன்
முகில் இன்னும் துயில் கொள்ளவே
உன் கையை நீ நீட்டினால் நான் என்ன தான் செய்வதோ ஓ..ஓ...ஓ


என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
என் நெஞ்சில் தூங்கவா நிலாவே


என் உள்ளம் வெறும் கோப்பை தான்
தடுமாறும் கண்ணே உன் காதல்
நீர் ஊற்றினால் ஆடாது பெண்ணே..
என் உள்ளம் வெறும் கோப்பை தான்
தடுமாறும் கண்ணே உன் காதல்
நீர் ஊற்றினால் ஆடாது பெண்ணே
நீ வந்து என் கோப்பையை நிறைவாக மாற்று
உடையாமல் ஊற்று


என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
ஓ வீட்டில் யாரும் இல்லை
வெளியில் யாரும் இல்லை
ஊரில் ஒரு ஓசை இல்லை
பால் போல வா பள்ளி கொள்ள நீ வா

என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
என் நெஞ்சில் தூங்கவா நிலாவே

யாரும் இல்லாத தீவொன்று...


படம்: ஞானப்பழம்
இசை:
பாடியவர்கள்: சுஜாதா, உன்னி கிருஷ்ணன்
வரிகள்:

யாரும் இல்லாத தீவொன்று வேண்டும் வேண்டும்
அதில் என்னோடு நீ மட்டும் வேண்டும்
(யாரும்...)
(யாரும்...)

ஆகாயம் வெண்மேகம் பாயாக வேண்டும்
பாய் மீது விண்மீன்கள் பூவாக வேண்டும்
ஆதாமும் ஏவாளும் நாமாக உருமாறி
அகிலத்தை புதுப்பிக்க வேண்டும் வேண்டும்


என் விழியில் பிம்பம் - என்றும்
நீயாக வேண்டும்
உன் மொழிகள் ஒன்றே
என்றும் என் காதில் வேண்டும்

உன்னுடைய பெயர் சொல்லி
என் இதயம் துடிக்கின்ற
வரம் ஒன்று பெற வேண்டுமே
என் நாடி நரம்பெங்கும்
உன் ஜீவன் குடி வந்து
ஸ்வரம் மீட்டும் சுகம் வேண்டுமே

நொடி கூட நில்லாத
கடிகார முள்ளாக
மனம் உன்னை வலம் வந்து
உயிரோடு உயிர் சேர...
(யாரும்...)


காவிரியில் வந்து - கங்கை
கை சேர்க்க வேண்டும்
நாமும் அதில் சென்று
காதல் நீராட வேண்டும்

ஈழத்தில் போர் ஓய்ந்து
தேன் முல்லை பூ பூத்து
நீ சூட தர வேண்டுமே
தீ எறியும் காஷ்மீரில்
தென்றல் வரும் திருநாளில்
ஊர்கோலம் வரவேண்டுமே

வெடிகுண்டு பூச்செண்டு
என மாறும் நாள் ஒன்று
மடி மீது தலை சாய்த்து
சுகமாக துயில் மேகம்...
(யாரும்...)

Friday, November 27, 2009

கண்ணோடு கண்ணோடு வந்த காதல்...


படம்: கனவே கலையாதே
இசை: தேவா
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், மகாநதி ஷோபனா
வரிகள்:

கண்ணோடு கண்ணோடு வந்த காதல்
காதோடு காதோடு பேசும் காதல்
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்
உறவே வருக நெஞ்சில் ஊஞ்சல் ஆட வருக

கண்ணோடு கண்ணோடு வந்த காதல்
காதோடு காதோடு பேசும் காதல்
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்
(கண்ணோடு கண்ணோடு...)


அன்பே அன்பே உன் ஆடை கொடு
உந்திருமுகம் தெரியட்டுமே
திங்கள் பெண்ணே உன் திரை விலக்கு
கண் நிலவுகள் மலரட்டுமே

உன்கால் கொலுசு சங்கீதம் பாடாதா
உன் கண்மணியில் என் காலம் விடியாதா
உன் கூந்தல் பூக்காடு நான் சூட பூவில்லையா
உயிரின் குரல் தான் அடி உனக்கு கேட்கவில்லையா
(கண்ணோடு கண்ணோடு...)


நெஞ்சே நெஞ்சே நீ நெருங்கிவிட
என் நிழலுக்குள் கரைந்து விடு
பூக்கள் கொஞ்சும் என் கூந்தலுக்குள்
புது குடித்தனம் தொடங்கிவிடு
உன் நேசம்தான் இன்னாளில் ஆதாயம்
உன் நெஞ்சில் தான் முடியும் என் ஆகாயம்
பொய்கள் மறைந்தால் கடலலைகள் காதல் சொல்லட்டும்
(கண்ணோடு கண்ணோடு...)

Friday, November 20, 2009

என்னோடு காதல் என்று...


படம்: பஞ்ச தந்திரம்
இசை: தேவா
பாடியவர்கள்: மனோ, ஹரிணி
வரிகள்: வைரமுத்து

என்னோடு காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா
ஊரெங்கும் வதந்திக் காற்று வீச வைத்தது
நானா இல்லை நீயா

உன்னோடு லவ் என்று ஊர் சொன்னது
நீ வேறு வேறு நான் வேறு யார் சொன்னது

என்னோடு காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா


என் சட்டை பட்டனோடு கூந்தல் முடியை சிக்கவைத்து
ஐயு விடுடா என்றாய் நோ நோ நோ நோ
என் கண்ணில் தூசு கண்டு ஊதும் சாக்கில் ஒட்டி நின்று
மனசை குப்பை செய்தாய் சீ சீ சீ சீ

கண்ணை ஊதும் வேளை பார்த்து
வாயை ஊதி விட்டதாரு
நீயா இல்லை நானா
சரி வளைக்க முயன்றது யாரு யாரு
நீயா நானா
வளைந்து கொடுத்தது யாரு யாரு
நீயா நானா

நான் வந்து நீயோடு ஒன்றானது
நாம் என்ற சொல் ஒன்று உண்டானது - ஆண்டவா

என்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா இல்லை நானா


நம் ஹோட்டல் மாடி அறைக்கு நடந்து செல்வோம் என்ற போது
லிஃப்டில் செல்வோம் என்றாய் நோ நோ நோ நோ
பெண்ணே நம் லிஃப்டுக்குள்ளே நீள அகலம் நிறைய இருந்தும்
என்னை இழுத்து நின்றாய் சீ சீ சீ சீ

லிஃப்டின் கதவு திறந்த பிறகும்
லிஃப்பை மூடிக் கிடந்ததாரு
நீயா இல்லை நானா
ஒட்டி வந்தது யாரு; யாரு யாரு
நீயா நானா
ஒத்துழைத்தது யாரு; யாரு நீயா நானா

உன்னோடு லவ் என்று ஊர் சொன்னது
நீ வேறு வேறு நான் வேறு யார் சொன்னது

(என்னோடு காதல்...)
என்னோடு காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா

Tuesday, November 17, 2009

சின்னஞ் சிறு வயதில்...


படம்: மீண்டும் கோகிலா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், SP ஷைலஜா
வரிகள்: கண்ணதாசன்

சின்னஞ் சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி - செல்லம்மா
பேசவும் தோணுதடி

சின்னஞ் சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி - செல்லம்மா
பேசவும் தோணுதடி


மோகனப் புன்னகையில் ஓர் நாள்
மூன்று தமிழ் படித்தேன்
மோகனப் புன்னகையில் ஓர் நாள்
மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர்
தத்துவம் சொல்லி வைத்தான்
உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர்
ஊமையைப் போலிருந்தேன்
ஊமையைப் போலிருந்தேன்
ம்... ம்... ம்...
ஆ... ஆ... ஆ... ஆ...
கள்ளத்தனம் என்னடி
எனக்கோர் காவியம் சொல்லு என்றான்

(சின்னஞ் சிறு வயதில்...)


வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்
வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்
பள்ளித்தலம் வரையில் - செல்லம்மா
பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே எனது
கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே
மோதும் விரகத்திலே - செல்லம்மா ......
ம்... ம்... ம்... ம்...

(சின்னஞ் சிறு வயதில்...)

Saturday, November 14, 2009

நான் பாடும் பாடல் நீயல்லவா...


படம்:
இசை:
பாடியவர்கள்:
வரிகள்:

நான் பாடும் பாடல் நீயல்லவா
நீயே என் வாழ்வின் நிழலல்லவா
நீயே என் வாழ்வின் நிழலல்லவா
நீ இல்லாத வாழ்க்கை கனவல்லவா

நான் பாடும் பாடல் நீயல்லவா
நீயே என் வாழ்வின் நிழலல்லவா
நீயே என் வாழ்வின் நிழலல்லவா
நீ இல்லாத வாழ்க்கை கனவல்லவா


இழந்தென்றல் காற்று தாலாட்டும் நேரம்
எனை மீறி நெஞ்சம் உனை நாடுதே
வெண்மேகத்தேரில் விளையாட எண்ணி
ஏதேதோ ஆசை உண்டாகுதே
நீ எங்கு சென்றாலும் என் உள்ளமே
நீ போகும் வழி மீது பூத்தூவுமே


நீயே என் வாழ்வின் நிழலல்லவா
நீயே என் வாழ்வின் நிழலல்லவா
நீ இல்லாத வாழ்க்கை கனவல்லவா

நான் பாடும் பாடல் நீயல்லவா
நீயே என் வாழ்வின் நிழலல்லவா
நீயே என் வாழ்வின் நிழலல்லவா
நீ இல்லாத வாழ்க்கை கனவல்லவா

நதியாக நானும் பிறந்தாலும் போதும்
உன் பேரைச்சொல்லி நடை போடுவேன்
மண்ணாக நானும் மறு ஜென்மம் கொண்டால்
உன் பாதம் தாங்கும் நிலமாகுவேன்
என்னாளும் தேயாத சந்ரோதயம்
என் நெஞ்சில் ஒளி வீசும் தேவாலயம்

நீயே என் வாழ்வின் நிழலல்லவா
நீயே என் வாழ்வின் நிழலல்லவா
நீ இல்லாத வாழ்க்கை கனவல்லவா
நான் பாடும் பாடல் நீயல்லவா
நீயே என் வாழ்வின் நிழலல்லவா
நீயே என் வாழ்வின் நிழலல்லவா
நீ இல்லாத வாழ்க்கை கனவல்லவா

Friday, October 23, 2009

ஆனதென்ன... ஆவதென்ன...


படம்: யாதுமாகி
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்கள்: பென்னி தயாள்
வரிகள்:

ஆனதென்ன... ஆவதென்ன...
என்னிடம் மாற்றம் கண்டேன்
சொன்னதென்ன... சொல்வதென்ன...
உன்னிடம் கேட்டு நின்றேன்

உயிர் வரை தீண்டினாய்
அடை மழை தூவினாய்
முதல் முறை சிலிர்க்கிறேன்
காதல்... இதுவோ...

ஏதுமில்லா என் நினைவில்
என்னென்னவோ நடக்க
யாருமில்லா என் மனதில்
சாரலும் அடிக்க

நேற்று காதல் இல்லை
என் நெஞ்சில் நீயும் இல்லை
இன்று ஏன் மாறினேன்
காதல்... இதுவோ...

பேசும் மின்சாரம் நீயா
பாடும் மின்மினி நீயா
யாவும் நீயா
உயிரின் ஆதாரம் நீயா

நேற்று முன்னாடி வந்தாய்
நெஞ்சை கண்ணாடி செய்தாய்
பிம்பம் தந்தாய்
என்னையே வெல்கிறாய்


எல்லை இல்லா வானம் என்று
என்னை நினைத்திருந்தேன்
உள்ளங்கையால் மூடிக் கொண்டாய்
மிச்சம் இன்றிக் கரைந்தேன்

என்னை நீ வாங்கினாய்
எனக்குத் தெரியாமலே
உன்னில் நான் மூழ்கினேன்
காதல்... இதுவோ...


ஆனதென்ன... ஆவதென்ன...
என்னிடம் மாற்றம் கண்டேன்
சொன்னதென்ன... சொல்வதென்ன...
உன்னிடம் கேட்டு நின்றேன்

உயிர் வரை தீண்டினாய்
அடை மழை தூவினாய்
முதல் முறை சிலிர்க்கிறேன்
காதல்... இதுவோ...

பேசும் மின்சாரம் நீயா
பாடும் மின்மினி நீயா
யாவும் நீயா
உயிரின் ஆதாரம் நீயா

நேற்று முன்னாடி வந்தாய்
நெஞ்சை கண்ணாடி செய்தாய்
பிம்பம் தந்தாய்
என்னையே வெல்கிறாய்

பேசும் மின்சாரம் நீயா
பாடும் மின்மினி நீயா
யாவும் நீயா
உயிரின் ஆதாரம் நீயா

நேற்று முன்னாடி வந்தாய்
நெஞ்சை கண்ணாடி செய்தாய்
பிம்பம் தந்தாய்
என்னையே வெல்கிறாய்
என்னையே வெல்கிறாய்

Friday, October 16, 2009

முதல் முதலாக முதல் முதலாக...


படம்: உன்னாலே உன்னாலே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கார்த்திக், கிருஷ், ஹரினி
வரிகள்:

முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாக பரவசமாக வா வா வா அன்பே
ஓஹோ.. தனித்தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக வா வா வா அன்பே

உன்னாலே உன்னாலே
விண்ணாளச் சென்றேனே
உன் முன்னே உன் முன்னே
மெய்தாள நின்றேனே

ஒரு சொட்டுக் கடலும் நீ
ஒரு பொட்டு வானம் நீ
ஒரு புள்ளிப் புயலும் நீ
பிரம்மித்தேன் - ஹோ

ஒளி வீசும் இரவும் நீ
உயிர் கேட்கும் அமுதம் நீ
இமை மூடும் விழியும் நீ
யாசித்தேன்

(முதல் முதலாக...)
(முதல் முதலாக...)


ஒரு பார்வையின் நீளத்தை
ஒரு வார்த்தையின் ஆழத்தை
தாங்காமல் விழுந்தேனே
தூங்காமல் வாழ்வேனே

நதி மீது சருகைப்போல்
உன் பாதை வருகின்றேன்
கரை தேற்றி விடுவாயோ
கதி மோட்சம் தருவாயோ

மொத்தமாய் மொத்தமாய்
நான் மாறிப் போனேனே
சுத்தமாய் சுத்தமாய்
தூள் தூளாய் ஆனேனே

(முதல் முதலாக...)
(உன்னாலே உன்னாலே...)


நீ என்பது மழையாக
நானென்பது வெயிலாக
மழையோடு வெயில் சேரும்
அந்த வானிலை சுகமாகும்

சரி என்று தெரியாமல்
தவறென்று புரியாமல்
எதில் வந்து சேர்ந்தேன் நான்
எதிர்பார்க்கவில்லை நான்

என் வசம் என் வசம்
இரண்டடுக்கு ஆகாயம்
இரண்டிலும் போகுதே
என் காதல் கார் மேகம்

(உன்னாலே உன்னாலே...)

Thursday, October 15, 2009

ஜூன் போனால்...


படம்: உன்னாலே உன்னாலே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கிரிஷ், அருண்
வரிகள்:

ஜூன் போனால் ஜூலை காற்றே
கண் பார்த்தால் காதல் காற்றே
பூப் பூத்தால் தேன் வருமே
பெண் பார்த்தால் தீ வருமே

என்னாச்சு தோணலையே
ஏதாச்சு தெரியலையே
நட்பாச்சு லவ் இல்லையே
லவ் ஆச்சு நட்பில்லையே

நேற்று என்பதுன் கையில் இல்லை
நாளை என்பதும் பையில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு
தோழா முத்தக் கூத்துக்கள் யாருக்காக
மொத்த பூமியும் கூத்துக்காகத்தான்... அன்பே
(நேற்று என்பதும்...)
(ஜூன் போனால்...)


அறைக்குள்ளே மழை வருமா
வெளியே வா குதூகலமா
இந்த பூமிப் பந்து எங்கள் கூடைப் பந்து
அந்த வானம் வந்து கூரை செய்ததின்று

கறை இருக்கும் நிலவினை சலவை செய்
சிறையிருக்கும் மனங்களைப் பறவை செய்
எந்த மலர்களும் கண்ணீர் சிந்திக் கண்டதில்லை
(ஜூன் போனால்...)


இருப்போமா வெளிப்படையாய்
சிரிப்போமா மலர்க் குடையாய்
சிற்பி விரல்களும் சிலை செதுக்குமே
பெண்ணின் விழிகளோ நம்மை செதுக்குமே

ரொம்ப காதலை இந்த பூமி கண்டிருக்கும்
பல மாற்றங்கள் வந்து வந்து போயிருக்கும்
இந்த உலகத்தில் எவருமே ராமன் இல்லை
(ஜூன் போனால்...)
(நேற்று என்பதும்...)
(நேற்று என்பதும்...)

அழகே சுகமா...


படம்: பார்த்தாலே பரவசம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், சாதனா சர்கம்
வரிகள்:

அழகே சுகமா - உன்
கோபங்கள் சுகமா (2)
அன்பே சுகமா - உன்
தாபங்கள் சுகமா (2)

தலைவா சுகமா... சுகமா...
உன் தனிமை சுகமா... சுகமா...
வீடு வாசல் சுகமா - உன்
வீட்டு தோட்டம் சுகமா
பூக்கள் எல்லாம் சுகமா - உன்
பொய்கள் எல்லாம் சுகமா
அன்பே சுகமா - உன்
தாபங்கள் சுகமா...


அழகே உன்னை பிரிந்தேன்
என் அறிவில் ஒன்றை இழந்தேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று
விளக்கை அணைத்து அழுதேன்

அன்பே உன்னை வெறுத்தேன்
என் அறிவை நானே எரித்தேன்
உறவின் பெருமை பிரிவில் கண்டு
உயிரில் பாதி குறைந்தேன்

பழைய மாலையில் புதிய பூக்கள்தான்
சேராதா
பழைய தாலியில் புதிய முடிச்சுகள்
போடாதா

வாழ்க்கை ஓர் வட்டம்போல்
முடிந்த இடத்தில் தொடங்காதா
வாழ்க்கை ஓர் வட்டம்போல்
முடிந்த இடத்தில் தொடங்காதா

அழகே சுகமா - உன்
கோபங்கள் சுகமா

Wednesday, October 14, 2009

எனக்கு பிடித்த பாடல்...


படம்: ஜுலி கணபதி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஷ்ரேயா கோஷல்
வரிகள்:

எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது பூக்களா மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா
(எனக்கு பிடித்த )


மெல்ல நெருங்கிடும் போது நீ தூரப் போகிறாய்
விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய்
காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்
(எனக்கு பிடித்த)


வெள்ளிக் கம்பிகளைப்போலே ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணில் வந்து சேர அது பாலம் போடுதோ
நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் மறவியாய் அன்பிலே நனைக்கிறாய்
வேதம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்
(எனக்கு பிடித்த)

Tuesday, October 13, 2009

நினைத்து நினைத்து (M)


படம்: 7G ரெயின்போ காலனி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: KK
வரிகள்: நா முத்துகுமார்

நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்

எடுத்துப் படித்து முடிக்கும் முன்னே
எறியும் கடிதம் எதற்கு பெண்ணே
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்


அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னைக் கேட்கும் எப்படிச் சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மௌனமா?
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படிச் சொல்வேன்
உடைந்து போன வளையல் பேசுமா?

உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே?
தோளில் சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே


பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கறையும் வார்த்தை கறையுமா?
பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா?

தொடர்ந்து வந்த நிழல்கள் இங்கே
தீயில் சேர்ந்து போகும்
திருட்டுப் போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன்

உயிரிலே என் உயிரிலே...


படம்: வெள்ளித்திரை
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர்
வரிகள்: வைரமுத்து

உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன் பாரடி
காணாமல் போனாயே இது காதல் சாபமா
நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும் ஒடமா
(உயிரிலே...)


கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை
கண்களிலே தூவிவிட்டாய் மண் துகளை
இந்த சோகம் இங்கு சுகமானது
அது வரமாக நீ தந்தது
நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்
என் துணையாக வருகின்றது
ஆறாத காயங்கள் என் வாழ்கை பாடமா
இனி தீயே வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா
(உயிரிலே...)


கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்
காதலிலே விழுந்த பின்னே கரையில்லையே
இந்தக் காதல் என்ன ஒரு நடை வண்டியா
நான் விழுந்தாலும் மீண்டும் எழ
இரு கண்ணைக் கட்டி ஒரு காட்டுக்குள்ளே
என்னை விட்டாயே எங்கே செல்ல
ஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி
அது தெருவின் ஓரம் நிறுத்தி வைக்கும்
பழுதான தேரடி
(உயிரிலே...)

Sunday, October 11, 2009

விழியிலே என் விழியிலே...


படம்: வெள்ளித்திரை
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: சித்ரா
வரிகள்: வைரமுத்து

விழியிலே என் விழியிலே
கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தளும்புதே
கன்னங்களில் கண்ணீர் வந்து
உன் பெயரையே எழுதுதே
முத்தமிட்ட உதடுகள் உலருதே
நான் என்னைக் காணாமல்
தினம் உன்னைத் தேடினேன்
என் கண்ணீர்த் துளியில் நமக்காக
ஒரு மாலை சூடினேன்
(விழியிலே...)


இமைகளிலே கனவுகளை விதைத்தேனே
ரகசியமாய் நீர் ஊற்றி வளர்த்தேனே
இங்கு வெறும் காற்றிலே நான் விரல் நீட்டினேன்
உன் கையோடு கை சேரத்தான்
உன் உறவும் இல்லை என் நிழலும் இல்லை
இனி என் காதல் தொலை தூரம்தான்
நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே
அந்த சாம்பல் மீதும் உனக்காக
சில பூக்கள் பூக்குமே
(விழியிலே...)


உள்ளிருக்கும் இதயத்துக்கு எனைப் புரியும்
யாருக்குத்தான் நம் காதல் விடை தெரியும்
காதல் சிறகானது இன்று சருகானது
என் உள் நெஞ்சம் உடைகின்றது
உன் பாதை எது என் பயணம் அது
பனித் திரை ஒன்று மறைக்கின்றது
ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா
விதி கண்ணாமூச்சி விளையாட
நாம் காதல் பொம்மையா...
(விழியிலே...)

Wednesday, October 7, 2009

கண்ணால் பேசும் பெண்ணே...


படம்: ரெண்டு
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: SP பாலசுப்பிரமணியம்
வரிகள்: வைரமுத்து

கண்ணால் பேசும் பெண்ணே
என்னை மன்னிப்பாயா
கவிதை தமிழில் கேட்டேன்
என்னை மன்னிப்பாயா
சலவை செய்த நிலவே
என்னை மன்னிப்பாயா
சிறு தவறை தவறி செய்தேன்
என்னை மன்னிப்பாயா

எனது கோரிக்கை நீ கேளடி கேளடி..
உனது கோபங்களும் ஏனடி
உனது சில்லென்ற கண் பாரடி பாரடி..
எனது சாபங்களை தீரடி

கண்ணால் பேசும் பெண்ணே
என்னை மன்னிப்பாயா
ஒரு கவிதை தமிழில் கேட்டேன்
என்னை மன்னிப்பாயா


நிலா.. பேசுவதில்லை
அது ஒரு குறை இல்லையே! ஹா...
குறை அழகென்று கொண்டால்
வாழ்க்கையில எங்கும் பிழையில்லையே.

பெண்ணே அறிந்து கொண்டேன்
இயல்பே அழகு என்பேன்
பூவை வரைந்து அதிலே
மீசை வரையமாட்டேன்

மௌனம் பேசும்போது
சப்தம் கேட்கமாட்டேன்
மூன்றாம் பிரையினுள்ளே
நிலவை தேட மாட்டேன்

வாழ்வு துவர்க்குதடி
வயசோ கசக்குதடி
சைகையிலே எனை மன்னித்து
சாபம் தீரடி

Oh.. I'm sorry I'm sorry I'm sorry
Oho. I'm sorry I'm sorry I'm sorry
Oh.. I'm sorry I'm sorry I'm sorry
Oho. I'm sorry I'm sorry I'm sorry

(கண்ணால் பேசும்...)


எங்கே குறுநகை எங்கே
குறும்புகள் எங்கே...கூறடி ஹோ...
கண்ணில் கடல் கொண்ட கண்ணில்
புயல் சின்னம் ஏதோ தெரியுதடி

செல்லக்கொஞ்சல் வேண்டாம்
சின்ன சிணுங்கல் போதும்
பார்த்துப் பழக வேண்டாம்
பாதி சிரிப்பு போதும்
காரப் பார்வை வேண்டாம்
ஓரப் பார்வை போதும்
வாசல் திறக்க வேண்டாம்
ஜன்னல் மட்டும் போதும்

வாழ்கை கடக்குதடி
நாட்கள் நரைக்குதடி
இரு கண்ணால் என் வாழ்வை நீ
ஈரம் செய்யடி

Oh.. I'm sorry I'm sorry I'm sorry
Oho. I'm sorry I'm sorry I'm sorry
Oh.. I'm sorry I'm sorry I'm sorry
Oho. I'm sorry I'm sorry I'm sorry

(கண்ணால் பேசும்...)

நீ என் தோழியா இல்லை...


படம்: ரெண்டு
இசை: D இம்மான்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர், சுஜாதா
வரிகள்:

நீ என் தோழியா இல்லை காதலியா
நீ என் தோழியா இல்லை காதலியா
தோழி என்றால் என் உயிரை கொடுப்பேன்
காதலி என்றால் உன் உயிரை எடுப்பேன்
நீ என் தோழியா இல்லை காதலியா
நீ என் தோழியா இல்லை காதலியா

என் உயிரை எத்தனை முறை
வேண்டும் என்றாலும்
எடுத்துக்கொள்
நீ எடுத்துக்கொள்
ஆனால் என்னை உடனே
உந்தன் உயிர் காதலியாய்
மாற்றிக்கொள்
என்னை மாற்றிக்கொள்
நீ என் தோழியா இல்லை காதலியா
நீ என் தோழியா இல்லை காதலியா


கையும் காலும் ஓடாது
கண் இமையும் வாடாது
கன்னி நெஞ்சம் தூங்காது
பஞ்சு மெத்தை கேட்காது
பையா பையா காதல் நீதான்
சொல்லாமல்

இதயத்தை எடுத்து நீட்டு நீ
சொல்லுற எந்தன் காதில
இதழ்களை கொஞ்சம் காட்டு நீ
எழுதுறேன் காதல் உயிலை நானே
கத்தி இன்றி ரத்தம் இன்றி
பிச்சு தாரேன் இதயத்த

கையகக் கட்டி வாயப் பொத்தி வேண்டுறன் தெய்வத்த
காதலன் காதலி வரிசையில் சேர்ந்திட்டோம் நாமதான்
நீ என் தோழியா இல்லை காதலியா
நீ என் தோழியா இல்லை காதலியா


சொன்னா பேச்சை கேட்காது
அப்பா மூஞ்சிய பார்க்காது
அம்மா கூட பேசாது
நேரம் காலம் தெரியாது
பொண்ணுக்குத்தான் காதல் மட்டும் வந்தாலே

உன்னை விட மோசம் நானடி
ஊரு பேரு மறந்து போச்சுடி
மூளை கூட கழண்டு போச்சுடி
எனக்குள்ளே நீயே வந்ததாலே
விடு விடு காதலிக்க மூளையெல்லாம் எதுக்குடா

போடி உன்னை காதலிக்க மூளை ஒன்னும் வேண்டாமடி
எனக்கு இது வேணும்டா இன்னமும் வேணும்டா தேவுடா
(நீ என் தோழியா...)

Wednesday, September 30, 2009

வசந்த கால நதிகளிலே...


படம்: மூன்று முடிச்சு
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம், MS விஸ்வநாதன்
வரிகள்: கண்ணதாசன்

வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரண்டின் நினைவலைகள்

நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலர்க்கணைகள்

மலர்க்கணைகள் பாய்ந்துவிட்டால்
மடியிரண்டும் பஞ்சணைகள்
பஞ்சணையில் பள்ளி கொண்டால்
மனமிரண்டும் தலையணைகள்

தலையணையில் முகம் புதைத்து
சரசமிடும் புதுக்கலைகள்
புதுக்கலைகள் பெறுவதற்கு
பூமாலை மணவினைகள்

மணவினைகள் யாருடனோ
மாயவனின் விதிவகைகள்
விதிவகைகள் முடிவு செய்யும்
வசந்தகால நீரலைகள்

தூங்காத விழிகள் ரெண்டு...


படம்: அக்னி நட்சத்திரம்
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், S ஜானகி
வரிகள்:

தூங்காத விழிகள் ரெண்டு - உன்
துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது
அன்பே நீ இல்லாது
(தூங்காத...)


மாமர இலை மேலே.... ஆ... ஆ...
மாமர இலை மேலே
மார்கழிப் பனி போலே
பூமகள் மடி மீது
நான் தூங்கவோ?

ராத்திரி பகலாக
ஒருபோதும் விலகாமல்
ராஜனைக் கையேந்தி
தாலாட்டவோ

நாளும் நாளும்
ராகம் தாளம்
சேரும் நேரம்
தீரும் பாரம்

ஆ... ஆ... ஆ...
(தூங்காத....)


ஆலிலை சிவப்பாக
அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேறும்
நிலையென்னவோ

ஆதியும் புரியாமல்
அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேறும்
கலையல்லவோ

மாதுளங்கனியாட
மலராட கொடியாட
மாருதம் உறவாடும்
கலையென்னவோ

வாலிபம் தடுமாற
ஒரு போதை தலைக்கேற
வார்த்தையில் விளங்காத
சுவையல்லவோ

மேலும் மேலும்
மோகம் கூடும்
ஆ.....
தேகம் யாவும்
கீதம் பாடும்
ஆ... ஆ... ஆ....
(தூங்காத...)

அதிசய ராகம்....


படம்: அபூர்வ ராகங்கள்
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ்
வரிகள்: கண்ணதாசன்

அதிசய ராகம்
ஆனந்த ராகம்
அழகிய ராகம்
அபூர்வ ராகம்
(அதிசய...)


வசந்த காலத்தில்
மழை தரும் மேகம் - அந்த
மழை நீர் அருந்த
மனதினில் மோகம்

இசை எனும் அமுதினில்
அவளொரு பாகம் (2)
இந்திர லோகத்துச்
சக்கரவாகம்
(அதிசய...)


பின்னிய கூந்தல்
கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம்
அவளது தேகம்

தேவர்கள் வளர்த்திடும்
காவிய யாகம்
அந்த தேவதை கிடைத்தால்
அது என் யோகம் (2)

ஒரு புறம் பார்த்தால்
மிதிலையின் மைதிலி
மறுபுறம் பார்த்தால்
காவிரி மாதவி

முகம் மட்டும் பார்த்தால்
நிலவின் எதிரொளி
முழுவதும் பார்த்தால்
அவளொரு பைரவி
அவளொரு பைரவி
அவளொரு பைரவி

கையில் மிதக்கும் கனவா நீ...


படம்: ரட்சகன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ்
வரிகள்: வைரமுத்து

கனவா.. நீ காற்றா
கனவா.. இல்லை காற்றா

கையில் மிதக்கும் கனவா நீ
கைகால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே
நுரையால் செய்த சிலையா நீ

இப்படி உன்னை ஏந்திக்கொண்டு
இந்திரலோகம் போய்விடவா
இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்
சந்திரத் தரையில் பாயிடவா
(கையில்...)


நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேனடி
அதைக் கண்டு கொண்டேனடி
ஓ.....
(நிலவில்...)

காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாதே (2)
உன் பளிங்கு முகத்தைப் பார்த்துக் கொண்டால்
பசியோ வலியோ தெரியாதே

உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரம் தூரம் தெரியாதே
உன்மேல் வந்தொரு பூ விழுந்தால்
என்னால் தாங்க முடியாதே
(கையில்...)

காலங்களில் அவள் வசந்தம்...


படம்: பாவ மன்னிப்பு
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்கள்: PB ஸ்ரீநிவாஸ்
வரிகள்: கண்ணதாசன்

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
(காலங்களில்...)


பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு (2)
கனிகளிலே அவள் மாங்கனி (2)
காற்றினிலே அவள் தென்றல்
(காலங்களில்...)


பால்போல் சிரிப்பதில் பிள்ளை
பனி போல் அணைப்பதில் கன்னி (2)
கண் போல் வளர்ப்பதில் அன்னை (2)
அவள் கவிஞனாக்கினாள் என்னை
(காலங்களில்...)

சுந்தரி கண்ணால் ஒரு...


படம்: தளபதி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
வரிகள்: வாலி

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி

என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக

நானுனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே
(சுந்தரி...)


வாய் மொழிந்த வார்த்தை யாவும்
காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்துப் பாவை பார்த்த
காதல் இன்பம் மாயமா

ஆ... வாள் பிடித்து நின்றால் கூட
நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க் களத்தில் சாய்ந்தால் கூட
ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்

தேனிலவு நான் வாட
ஏனிந்த சோதனை

வான் நிலவை நீ கேளு
கூறுமென் வேதனை

எனைத்தான்
அன்பே மறந்தாயோ

மறப்பேன்
என்றே நினைத்தாயோ
(என்னையே...)
(சுந்தரி...)


சோலையிலும் முட்கள் தோன்றும்
நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும்
நானுன் மார்பில் தூங்கினால்

மாதங்களும் வாரம் ஆகும்
நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதம் ஆகும்
பாதை மாறி ஓடினால்

கோடி சுகம் வாராதோ
நீயெனைத் தீண்டினால்

காயங்களும் ஆறாதோ
நீ எதிர் தோன்றினால்

உடனே வந்தால்
உயிர் வாழும்

வருவேன்
அந்நாள் வரக் கூடும்
(சுந்தரி)
(என்னையே...)
(சுந்தரி)
(என்னையே...)

அடி ஆத்தாடி...


படம்: கடலோரக் கவிதைகள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, ஜானகி
வரிகள்: வைரமுத்து


அடி ஆத்தாடி...
அடி ஆத்தாடி...
இள மனசொன்னு ரெக்க கட்டிப் பறக்குது சரிதானா
அடி அம்மாடி...
ஒரு அலை வந்து மனசுல அடிக்குது அதுதானா

உயிரோடு
உறவாடும்
ஒரு கோடி ஆனந்தம்
இவன் மேகம் ஆக யாரோ காரணம்

ஆ... அடி ஆத்தாடி
இள மனசொன்னு ரெக்க கட்டிப் பறக்குது சரிதானா
அடி அம்மாடி...


மேல போகும் மேகம் எல்லாம்
கட்டுப்பட்டு ஆடாதோ
உன்னப் பாத்து அலைகள் எல்லாம்
மெட்டுக்கட்டி பாடாதோ

இப்படி நான் ஆனதில்லை
புத்தி மாறிப் போனதில்லை
முன்ன பின்ன நேர்ந்ததில்லை
மூக்கு நுனி வேர்த்ததில்லை

கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள
கத்திச்சண்டை கண்டாயோ
படபடக்கும் நெஞ்சுக்குள்ள
பட்டாம்பூச்சி பாத்தாயோ
இச கேட்டாயோ...
(அடி ஆத்தாடி...)


தாகப்பட்ட நெஞ்சுக்குள்ளா
ஏகப்பட்ட சந்தோசம்
உண்மை சொல்லு பொண்ணே
என்னை என்ன செய்ய உத்தேசம்

வார்த்தை ஒண்ணு வாய்வரைக்கும்
வந்து வந்து போவதென்ன
கட்டுமரம் பூப் பூக்க
ஆசைப்பட்டு ஆவதென்ன

கட்டுத்தறி காளை நானே
கன்னுக்குட்டி ஆனேனே
தொட்டுத்தொட்டு தென்றல் பேச
தூக்கங்கெட்டுப் போனேனே
சொல் பொன்மானே....
(அடி ஆத்தாடி...)

சின்னச் சின்ன வண்ண...


படம்: மௌனராகம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஜானகி
வரிகள்: வாலி

சின்னச் சின்ன வண்ணக் குயில்
கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா
(சின்னச் சின்ன...)


மன்னவன் பேரைச் சொல்லி
மல்லிகை சூடிக்கொண்டேன்
மன்மதன் பாடல் ஒன்றை
நெஞ்சுக்குள் பாடிக்கொண்டேன்

சொல்லத்தான் எண்ணியும்
இல்லையே பாஷைகள்
என்னவோ ஆசைகள்
எண்ணத்தின் ஓசைகள்

மாலை சூடி ம்....ம்....ம்.....
மஞ்சம் தேடி ம்.....ம்....ம்......
மாலை சூடி ம்....ம்....ம்.....
மஞ்சம் தேடி ம்...ம்....ம்......

காதல் தேவன் சந்நிதி
காண... காணக்காண... காண
(சின்னச் சின்ன...)


மேனிக்குள் காற்று வந்து
மெல்லத்தான் ஆடக்கண்டேன்
மங்கைக்குள் காதல் வெள்ளம்
கங்கை போல் ஓடக்கண்டேன்

இன்பத்தின் எல்லையோ
இல்லையே இல்லையே!
அந்தியும் வந்ததால்
தொல்லையே தொல்லையே

காலம் தோறும் ம்.....ம்.....ம்....
கேட்க வேண்டும் ம்....ம்......ம்....
காலம் தோறும் ம்.....ம்.....ம்....
கேட்க வேண்டும் ம்....ம்......ம்....

பருவம் என்னும் கீர்த்தனம்
பாட... பாடப்பாட... பாட...
(சின்னச் சின்ன...)

பழமுதிர்ச் சோலை...


படம்: வருஷம் 16
இசை: இளையராஜா
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ்
வரிகள்: வாலி

ஏ ஹே! ஹோ ஹோ! லாலலா!
ஏ ஹே! ஹோ ஹோ! லாலலா!
ஓ!....ஓ!

பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
நான்தான் அதன் ராகம் தாளமும்
கேட்டேன் தினம் காலை மாலையும் (2)
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்
(பழமுதிர்...)


தூரத்தில் போகின்ற மேகங்களே
தூறல்கள் போடுங்கள் பூமியிலே
வேர் கொண்ட பூஞ்சோலை
நீர் கொண்டு ஆட

ஏரியில் மீன்கொத்தும் நாரைகளே
சிறகுகள் எனக்கில்லை தாருங்களேன்
ஊர் விட்டு ஊர் சென்று
காவியம் பாட

பறவைகள் போல் நான் பறந்திட வேண்டும்
பனிமலை மேல் நான் மிதந்திட வேண்டும்
ஏதோ ஒரு போதை
மனம் கொண்டாடுதே!
(பழமுதிர்...)


பந்தங்கள் யாவும் தொடர்கதை போல்
நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்
நூலிழை போலிங்கு நெருங்கிய இதயங்கள்
பாலுடன் நெய்யெனக் கலந்திடும் நாள்

தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகள் மேவி
பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே
மண்ணில் இதைவிட சொர்க்கம் எங்கே

நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை - என்றும்
வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
இலக்கியம் போலெங்கள் குடும்பமும் விளங்க
இடைவிடாது மனமொரு மகிழ்ச்சியில் திளைத்திட
(பழமுதிர்...)

Tuesday, September 29, 2009

மண்ணில் இந்தக் காதலன்றி...


படம்: கேளடி கண்மணி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: பாவலர் வரதராசன்

மண்ணில் இந்தக் காதலன்றி
யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி
ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில்
இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில்
வாழும் மானிடா
(மண்ணில்...)


வெண்ணிலவும் பொன்னி நதியும்
கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும்
பெண்மையின் சுகமன்றி

சந்தனமும் சங்கத்தமிழும்
பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் குங்குமமுதம்
தந்திடும் குமுதமும்

கன்னிமகள் அருகே
இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால்
முழுதும் கசக்கும்

விழியினில் மொழியினில்
நடையினில் உடையினில்
அதிசய சுகம்தரும்
அணங்கிவள் பிறப்பிதுதான்
(மண்ணில்...)


முத்துமணி ரத்தினங்களும்
கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும்
குவிந்த அதரமும்

சிற்றிடையும் சின்ன விரலும்
வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும்
சுந்தர மொழிகளும்

எண்ணிவிட மறந்தால்
எதற்கோர் பிறவி
இத்தனையும் இழந்தால்
அவன் தான் துறவி

முடி முதல் அடி வரை
முழுவதும் சுகம் தரும்
விருந்துகள் படைத்திடும்
அரங்கமும் அவளல்லவா
(மண்ணில்)

Thursday, September 24, 2009

வசந்தம் பாடி வர...


படம்: ரயில் பயணங்களில்
இசை: T ராஜேந்தர்
பாடியவர்கள்: SP பாலசுப்பிரமணியம்
வரிகள்:

வசந்தம் பாடி வர வைகை ஓடி வர
இளமை கூடி வர இனிமை தேடி வர
ஆராதனை செய்யட்டுமா
நீரோடையில் நீந்தட்டுமா
(வசந்தம் பாடி வர...)


தேவதை போல் மயக்கும்
என் ராகம் அவள் அழைப்பு
பூங்காவிரி போல் நெளியும்
என் கீதம் அவள் சிரிப்பு

ராகமும் கீதமும் சேர்ந்திட அசைந்திடும் பாதம்
நாணமும் மோகமும் கலந்திட மறைந்திடும் தாளம்
விழியதன் வாசலில் எழுதிடும் கோலங்கள்
புரியாததோ புதிரானதோ
(வசந்தம் பாடி வர...)


ஒரு முறையே பார்க்க
அதில் உளந்தன்னை இழக்க
விழி மடல் கொண்டு மறைக்க
என் மனம் கொஞ்சம் கலங்க

மாதவள் சிரிப்பினில் மாதவம் கலைந்தது ஏனோ
பேதையின் விழிகளில் போதையும் விளைந்தது தானோ
நெஞ்சினிலாடிட குறிஞ்சியைப் போலொரு
மலர் தேடவோ ஹா மகிழ்ந்தாடவோ
(வசந்தம் பாடி வர...)

Wednesday, September 23, 2009

உன் பேர் சொல்ல ஆசைதான்...


படம்: மின்சாரக் கண்ணா
இசை: தேவா
பாடியவர்கள்: சுஜாதா, ஹரிஹரன்
வரிகள்:

உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்

உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன்மேல் ஆசைதான்
(உன் பேர்...)

உன்தோள் சேர ஆசைதான்
உன்னில் வாழ ஆசைதான்
உனக்குள் உதைய ஆசைதான்
உலகம் மறக்க ஆசைதான்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக
ஆசைதான்.
(உன் பேர்...)


கண்ணில் கடைக் கண்ணில்
நீயும் பார்த்தால் போதுமே
கால்கள் எந்தன் கால்கள்
காதல் கோலம் போடுமே

நாணம் கொண்டு மேகம் ஒன்று
மறையும் நிலவென
கூந்தல் கொண்டு முகத்தை
நீயும் மூடும் அழகென்ன

தூக்கத்தில் உன்பேரை நான் சொல்ல
காரணம் காதல் தானே
பிரம்மன் கூட ஒரு கண்ணதாசன்தான்
உன்னைப் படைத்ததாலே
(உன் பேர்...)


நீயும் என்னைப் பிரிந்தால்
எந்தன் பிறவி முடியுமே
மீண்டும் வந்து சேர்ந்தால்
மறு பிறவி தொடருமே

நீயும் கோவிலானால்
சிலையின் வடிவில் வருகிறேன்
நீயும் தீபமானால்
ஒளியும் நானே ஆகிறேன்

வானின்றி வெண்ணிலா இங்கில்லை
நாமின்றி காதல் இல்லையே
காலம் மறைந்த பின்னும் கூந்தல் நரைத்தபின்னும்
அன்பில் மாற்றம் இல்லையே
(உன் பேர்..)

ஆசைதான் உன்மேல் ஆசைதான்
ஆசைதான் உன்மேல் ஆசைதான்

தினம் தினம் உன் முகம்...


படம்: தங்கைக்கோர் கீதம்
இசை: T ராஜேந்தர்
பாடியவர்கள்: SP பாலசுப்பிரமணியம்
வரிகள்: T ராஜேந்தர்

தினம் தினம் உன் முகம்
நினைவினில் மலருது
நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்
உன்னை நானும் அறிவேன்
என்னை நீ அறியாய்
யாரென்று நீ உணரும் முதற் கட்டம்
மலருன்னை நினைத்து பபப்பப்பா
மலர் தினம் வைப்பேன் பபப்பப்பா
மலருன்னை நினைத்து பபப்பப்பா
மலர் தினம் வைப்பேன் பபப்பப்பா

மைவிழி...
மயக்குதே...

டிஸ்கோ டிஸ்கோ
டிஸ்கோ டிஸ்கோ
டிஸ்கோ டிஸ்கோ
ஹைஹை
ஹைஹைஹை

கவிதைகள் வரைந்தேன்
அதிலெந்தன் ரசனையைக் கண்டாயோ
கடிதங்கள் போட்டேன்
இதயத்தை பதிலாக்கித் தருவாயோ
முல்லை உன்னை அடைய
முயற்சியைத் தொடர்வேன்
மெளனமாகிப் போனால்
மனதினில் அழுவேன்
பாவையுன் பார்வையே அமுதமாம்
தகதகதகதகதக தம் ஹோ
தேவியுன் ஜாடையே தென்றலாம்
தகதகதகதகதக தும்

பாபபாபப்பாபா பாபபாபப்பாபா பபபா
பாபபாபப்பாபா பாபபாபப்பாபா பபபா

தாம்ததீம்ததக தாம்ததீம்ததக தகதீம்
தாம்ததீம்ததக தாம்ததீம்ததக தரிகிடதோம் தீம் தனனா


தவம் கூடச் செய்வேன்
தேவதையே கண்திறந்து பாராயோ ஹா
உயிரையும் விடுவேன்
காப்பாற்ற மனமின்றிப் போவாயோ
திரியற்றுக் கருகும்
தீபமென ஆனேன்
எண்ணையென நினைத்து
உன்னைத்தானே அழைப்பேன்
நிலவே நீ வா நீ வா தகதகதகதகதம் ஹோ
நினைவே நீ வா நீ வா தகதகதகதகதும் ஹோ
(தினம் தினம் உன் முகம்...)
(டிஸ்கோ...)

நல்லவர்க்கெல்லாம்...


படம்: தியாகம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன்
வரிகள்: கண்ணதாசன்

நல்லவர்க்கெல்லாம்...
நல்லவர்க்கெல்லாம்
சாட்சிகள் ரெண்டு
ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து
கல்லையும் பார்த்தால்
தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா
(நல்லவர்க்கெல்லாம்...)


நதி வெள்ளம் காய்ந்துவிட்டால்
நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
நதி வெள்ளம் காய்ந்துவிட்டால்
நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
பறவைகளே பதில் சொல்லுங்கள்
மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்
மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள்
(நல்லவர்க்கெல்லாம்...)


ஆண்டவன் அறிய நெஞ்சில்
ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
ஆண்டவன் அறிய நெஞ்சில்
ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
மனிதனம்மா மயங்குகிறேன்
தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே
(நல்லவர்க்கெல்லாம்...)

Saturday, September 19, 2009

தாலாட்டும் பூங்காற்று...


படம்: கோபுர வாசலிலே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஜானகி
வரிகள்:

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே
(தாலாட்டும் பூங்காற்று...)


நள்ளிரவில் நான் கண்விழிக்க
உன் நினைவில் என் மெய்சிலிர்க்க
பஞ்சணையில் நீ முள் விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
காணும் கோலங்கள் யாவும் நீயாக
வாசலில் மன்னா உன் தேர் வர
ஆடுது பூந்தோரணம்
(தாலாட்டும் பூங்காற்று...)


எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்
காலை நான் பாடும் காதல் பூபாளம்
காதில் கேட்காதோ கண்ணா எந்நாளும்
ஆசையில் நாள்தோறும் நான் தொழும்
ஆலயம் நீயல்லவா
(தாலாட்டும் பூங்காற்று...)

Tuesday, September 15, 2009

என் காதலா என்னை...


படம்: இதயமே இதயமே
இசை: சசி ப்ரீதெம்
பாடியவர்கள்: சித்ரா
வரிகள்: வைரமுத்து

என் காதலா என்னை
உயிர் வரைக்கும் தீண்டாதே
உன் கைகளால் எந்தன்
உணர்ச்சிகளைத் தூண்டாதே

என் உள்ளத்தில் நீயோ
மோக மழை சிந்தாதே
மாலை வரும் முன்னாலே
மன்மதனே முந்தாதே

என் மேனி சூடானால்
இமய மலை தாங்காதே
(என் காதலா என்னை...)


மண்ணோடு தீ மூண்டால்
உன்னோடு நான் சொல்வேன்
பெண்ணோடு தீ மூண்டதேன்
பெண்ணோடு தீ மூண்டதேன்

அழகான பொன் வீணை
அடங்காத பெண் வீணை
நீ மீட்டினால் தீருமோ
நீ மீட்டினால் தீருமோ

என் வாழ்வு உன்னோடு
இமை என்றும் கண்ணோடு
பதமான பாலாறு
பதறாமல் நீராடு

என் வாழ்வின் மாற்றங்கள்
நீ செய்த கோளாறு
நீ பேசினால் காதில்
தெவிட்டாத தேன் ஆறு

நீ தீண்டினால் போதும்
எனக்குள்ளே பூக் காடு
உன் மீது தான் ஆசை
எரித்தாலும் போகாது

உன் நேசம் இல்லாமல்
என் சுவாசம் வாழாது
(என் காதலா என்னை...)
(என் காதலா என்னை...)

என்று உன்னைக் கண்டேனோ...


படம்: இதயமே இதயமே
இசை: சசி ப்ரீதெம்
பாடியவர்கள்: மனோ
வரிகள்: வைரமுத்து

என்று உன்னைக் கண்டேனோ பெண்ணே
அன்றே எந்தன் உயிரைத் கண்டேனே தந்தேனே

என்று உன்னைக் கண்டேனோ பெண்ணே
அன்றே எந்தன் உயிரைத் கண்டேனே தந்தேனே

காலம் நின்றாலும் என் காற்றே நின்றாலும்
உன் மூச்சில் நானும் வாழ்வேனே கண்ணே

தேகம் விட்டு ரத்தம் போனாலும்
என் நெஞ்சை விட்டு உன் பிம்பம் போகாது

வாழும் நினைவுகளே என்னை உயிர் வாழச் செய்யும்
உன் கண்ணீர்த் துளியில் என் காயங்கள் ஆறும்

உன் துன்பத்தில் நானும் துணையாவேன்
உன் கண்ணீரில் நானும் துளியாவேன்

ஜீவன் போனாலும் ஏழு ஜென்மம் போனாலும்
உன் கன்னம் தடவும் காதல் காற்றாவேன்


காதல் என்றும் பூக்கள் தான் கேட்கும்
காதல் என்றும் ரத்தம் கேட்காது

கடலில் வெள்ளம் தீர்ந்தே போனாலும்
காதல் பாரம் தீர்ந்தே போகாது

காயம் நேர்ந்தாலும் அடி மரணம் நேராது
உன் உறவு சங்கிலி உயிரைக் கட்டுதடி

கண்ணில் உந்தன் காதல் எண்ணங்கள்
அது தான் எந்தன் வாழ்வின் அர்த்தங்கள்

என் நெஞ்சை விட்டு உன் நினைவும் போனாலே
என் உடலை விட்டு உயிரும் போய்விடுமே

தேகம் விட்டு ரத்தம் போனாலும்
என் நெஞ்சை விட்டு உன் பிம்பம் போகாது

வாழும் நினைவுகளே என்னை உயிர் வாழச் செய்யும்
உன் கண்ணீர்த் துளியில் என் காயங்கள் ஆறும்

உன் துன்பத்தில் நானும் துணையாவேன்
உன் கண்ணீரில் நானும் துளியாவேன்

ஜீவன் போனாலும் ஏழு ஜென்மம் போனாலும்
உன் கன்னம் தடவும் காதல் காற்றாவேன்

Friday, September 11, 2009

ஓ நெஞ்சே ஓ நெஞ்சே... (F)


படம்: காதலி
இசை: தேவா
பாடியவர்கள்: அனுராதா ஸ்ரீராம், ?
வரிகள்: பழனி பாரதி

ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே மறவாதே
என்னை மறவாதே

பாசம் வைப்பதே பாவமானதே
கண்ணீரில் காதல் நீந்துதே

காதலில் நான் வளர்த்த
கனவுக்கு ஆயுள் இல்லை
கண்ணுக்குள் நீ குளித்த
கண்ணீரும் காயவில்லை

பூக்களில் வாசமில்லை
வாழ்கையில் ஆசை இல்லை
யார் நெஞ்சில் யார் இருப்பார்
ஆண்டவன் சொல்லவில்லை

உன்னை நினைத்தே உள்ளம் தவிக்க
காத்து நிக்கிறேன் கண்கள் பனிக்க
என்ன நினைத்து என்னை நீ வெறுத்தாய்
பாடும் வீணையின் தந்தியை அறுத்தாய்

ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே மறவாதே
என்னை மறவாதே

பாசம் வைப்பதே பாவமானதே
கண்ணீரில் காதல் நீந்துதே


பிஞ்சான நாள் முதலாய்
நெஞ்சோடு நீ இருந்தாய்
பதினாறு வருஷம் வைத்த
பாசத்தை என் மறந்தாய்

அன்புக்குத் தவம் இருந்தேன்
சாபங்கள் நீ கொடுத்தாய்
இதயத்தின் துடிப்பை எல்லாம்
மௌனத்தில் உறைய வைத்தாய்

சின்னக் குயிலே சொல்லு பதிலை
ஊமையானதே எந்தன் நிலைமை
காதல் மாலையே தோளிலே சேருமோ
கொஞ்சம் கொஞ்சமாய் ஜீவனும் போகுமோ

ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே மறவாதே
என்னை மறவாதே

பாசம் வைப்பதே பாவமானதே
கண்ணீரில் காதல் நீந்துதே

ஓ நெஞ்சே ஓ நெஞ்சே... (M)


படம்: காதலி
இசை: தேவா
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன்
வரிகள்: பழனி பாரதி

ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே மறவாதே
என்னை மறவாதே

ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே மறவாதே
என்னை மறவாதே
அலை மோதுதே ஒரு ஞாபகம்
காதல் கொண்ட நெஞ்சம் தூங்குமா


கண்ணுக்குள் காதல் வைத்தாய்
கண்ணீரை சிரிக்க வைத்தாய்
கலண்டர் தாளை எல்லாம்
சிறகாக ஆக்கிவைத்தாய்

ஊஞ்சலை ஆடவிட்டு
ஓரமாய் நின்றிருந்தாய்
கூந்தலைக் கோதிவிட்டு
என் நெஞ்சில் தலை குளித்தாய்

சுகமானதே இந்த அவஸ்தை
தொலைத்துவிட்டேன் எந்தன் மனதை
நந்தவனமே எனை ஏன் பறித்தாய்
இந்த நிலையை எனக்கேன் கொடுத்தாய்

ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே மறவாதே
என்னை மறவாதே
அலை மோதுதே ஒரு ஞாபகம்
காதல் கொண்ட நெஞ்சம் தூங்குமா


அவள் பேரைக் கேட்ட பின்னே
என் பேரை மணந்து விட்டேன்
சொல்லத்தான் ஆசை வைத்தேன்
மௌனத்தில் கரைந்து விட்டேன்

கனவோடு வாழுகின்றேன்
கலைந்தாலும் வாடுகின்றேன்
நடுச் சாமம் கண் விழித்து
நான் அவளைத் தேடுகின்றேன்

கனவுகளோ கண்ணில் மிதக்க
நினைவுகளில் நெஞ்சம் பறக்க
கற்பனைகளில் வாழ்வதே வாழ்வா
கண்ணின் மணியே கைகளில் வா வா

ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே மறவாதே
என்னை மறவாதே
அலை மோதுதே ஒரு ஞாபகம்
காதல் கொண்ட நெஞ்சம் தூங்குமா

காதல் கொண்ட நெஞ்சம் தூங்குமா
காதல் கொண்ட நெஞ்சம் தூங்குமா
காதல் கொண்ட நெஞ்சம் தூங்குமா

ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே...


படம்: காதல்னா சும்மா இல்லை
இசை:
பாடியவர்கள்: சின்மை
வரிகள்:

ஆவாரம் பூ... அந்நாளில் இருந்தே
யாருக்குக் காத்திருக்கு
அந்திப் பகல்... மழை வெயில் சுமந்தே
உனக்காகப் பூத்திருக்கு...

சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா...

ஆவாரம் பூ... அந்நாளில் இருந்தே
யாருக்குக் காத்திருக்கு
அந்திப் பகல்... மழை வெயில் சுமந்தே
உனக்காகப் பூத்திருக்கு...


காற்றில் ஆடி தினந்தோறும்
உனது திசையை தொடருதடா
குழந்தைக் கால ஞாபகத்தில்
இதழ்கள் விரித்தே கிடக்குதடா
நெடு நாள்... அந்த நெருக்கம்...
நினைத்தே... அது கிடக்கும்...
சருகுகள் சத்தம் போடும்
தினம் சூழ்நிலை யுத்தம் போடும்
அதன் வார்த்தை எல்லாம் மெளனம் ஆகும்...

சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா...

ஆவாரம் பூ... அந்நாளில் இருந்தே
யாருக்குக் காத்திருக்கு
அந்திப் பகல்... மழை வெயில் சுமந்தே
உனக்காகப் பூத்திருக்கு...


ஆயுள் முழுதும் தவம் கிடந்தே
ஒற்றைக் காலில் நிற்குதடா
மாலை ஆகி தவழ்ந்திடவே
உனது மார்பை கேட்குதடா
பனியில்... அது கிடக்கும்...
நீயும் பார்த்தால்... உயிர் பிழைக்கும்...
வண்ணங்களெல்லாம் நீ தான்
அதன் வாசங்களெல்லாம் நீ தான்
நீ விட்டுச்சென்றால் பட்டுப்போகும்

சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா...

ஆவாரம் பூ... அந்நாளில் இருந்தே
யாருக்குக் காத்திருக்கு
அந்திப் பகல்... மழை வெயில் சுமந்தே
உனக்காகப் பூத்திருக்கு...

என்னமோ செய்தாய் நீ...


படம்: காதல்னா சும்மா இல்லை
இசை:
பாடியவர்கள்: சுஜாதா, உதித் நாராயணன்
வரிகள்:

என்னமோ செய்தாய் நீ
என்னதான் செய்தாய் நீ
என்னமோ செய்தாய் நீ
என்னதான் செய்தாய் நீ

எதிரில் யாரைப் பார்க்கும் போதும்
கண்கள் உன்னைத் தானே தேடும்
கால்கள் தரையில் இருக்கும் போதும்
மனசு பறந்து பார்க்கத் தோன்றும்

என்னமோ செய்தாய் நீ
என்னதான் செய்தாய் நீ

குடைகள் கையில் இருக்கும் போதும்
மழையில் நனைந்து பார்க்கத் தோன்றும்
கொஞ்சம் நெருங்கி பார்க்கத் தோன்றும்
கொஞ்சம் விலகி பார்க்கத் தோன்றும்


உன்னைப் பார்க்கும் முன்னே உலகம் சிறியதடி
உன்னைப் பார்த்த பின்னே உலகம் பெரியதடி
ஜன்னல் திறந்து பார்க்க வைத்தாய்
ஓ... என்னை உணர்ந்து பார்க்க வைத்தாய்

ஓ... நீ பார்க்கும் பார்வை ஒரு நாள்
நான் பார்க்கும் பார்வை ஆகும்

எப்படி எப்படி எப்படி எனக்குள் வந்தாய்
எந்தன் நெஞ்சை கேட்டு பார்த்தேன்
எத்தனை எத்தனை எத்தனை தடவை கேட்டும்
பதில்கள் இல்லையே

நதியில் மிதக்கும் இலைக்கு எல்லாம்
நதியின் ஆழம் தெரிவதில்லை
காதல் எந்த நிமிடம் பிறக்கும்
கடவுள் மனதும் அறிவதில்லை

என்னமோ செய்தாய் நீ
என்னதான் செய்தாய் நீ


குழந்தை சிரிப்பினிலே
உள்ளம் திருடுகிறாய்
மெதுவாய் மயிலிறகாய்
மனதை வருடுகிறாய்

காலம் உறைந்து போக வைத்தாய்
கனவில் கரைந்து போக வைத்தாய்

ஓ... பூ கோலம் முழுதும் பூ பூத்து
பூ கோலம் ஆனது உன்னாலே
எப்படி எப்படி எப்படி எனக்குள் வந்தாய்
எந்தன் நெஞ்சை கேட்டு பார்த்தேன்
எத்தனை எத்தனை எத்தனை எத்தனை தடவை
கேட்டும் பதில்கள் இல்லையே

கண்கள் கடிதம் போட்ட பின்னே
கிளிகள் பறந்து வருதில்லை
கண்கள் விரும்பிப் பார்த்த பின்னே
ஓ... இதயம் முரண்டு பிடிப்பதில்லை

என்னமோ செய்தாய் நீ
என்னதான் செய்தாய் நீ

கொஞ்சம் நெருங்கிப் பார்க்க தோன்றும்
கொஞ்சம் திரும்பிப் பார்க்க தோன்றும்
கால்கள் தரையில் இருக்கும் போதும்
மனசு பறந்து பார்க்கத் தோன்றும்

சொட்டச் சொட்ட நனையுது... (M)


படம்: தாஜ் மஹால்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ்
வரிகள்: வைரமுத்து

அடி நீ எங்கே... அடி நீ எங்கே...
அடி நீ எங்கே...அடி நீ எங்கே...அடி நீ எங்கே

சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு
குடையொண்ணு குடையொண்ணு தா கிளியே
விட்டுவிட்டுத் துடிக்குது என் நெஞ்சு
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே

அடி நீ எங்கே...நீ எங்கே...

நீ எங்கே நீ எங்கே பூ வைத்த பூ எங்கே
மழைத் தண்ணி உசிரக் கரைக்குதே
உசிர் உள்ள ஒருத்திக்கு தாஜ் மஹாலக்
கட்டிக் கொடுத்தவனும் நாந்தாண்டீ

அடியே நீ எங்கே எங்கே நீ எங்கே கண்ணீரில மழையும் கரிக்குதே
அடியே நீ எங்கே எங்கே நீ எங்கே கண்ணீரில மழையும் கரிக்குதே

சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு
குடையொண்ணு குடையொண்ணு தா கிளியே
விட்டுவிட்டுத் துடிக்குது என் நெஞ்சு
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே
அடி நீ எங்கே...நீ எங்கே...நீ எங்கே...


உனக்காக பரிசு ஒன்று கொண்டேன்
எதற்காக நீ விலகி நின்றாய்
நான் மழையல்லவே ஏன் ஒதுங்கி நின்றாய் (2)

எனைக்கண்டு சென்ற கனவே
உயிரைத் துண்டு செய்த மலரே
வந்து மழையிலாடு மயிலே... மயிலே

உன் நாணம் என்ன கண்ணே
மேகம் அட்சதை போடும்போது
தலையை நீட்ட வேண்டும் கண்ணே... கண்ணே

நீருக்கும் நமக்கும் ஒரு தேவ பந்தம்
அன்பே உருவானது
நீருக்குள் முகம் பார்த்த ஜோடி ஒன்றை
மீண்டும் மழை சேர்த்தது

(சொட்டச் சொட்ட...)

அடியே நீ எங்கே எங்கே நீ எங்கே கண்ணீரில மழையும் கரிக்குதே (3)
நீ எங்கே...நீ எங்கே...நீ எங்கே...நீ எங்கே... (3)

சொட்டச் சொட்ட நனையுது... (F)


படம்: தாஜ் மஹால்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சுஜாதா
வரிகள்: வைரமுத்து

அடி நீயிங்கே... அடி நீயிங்கே...

நீயிங்கே நீயிங்கே பூச்சூடும் ஆளெங்கே
தாலி கட்ட கழுத்து அரிக்குதே
இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க
அந்த முரட்டுப் பயலும் வருவானா (2)

சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு
குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம்
மேளங்கொட்டி மேளங்கொட்டி வா மாயா

அடி நீயிங்கே... அடி நீயிங்கே

நீயிங்கே நீயிங்கே பூச்சூடும் ஆளெங்கே
தாலி கட்ட கழுத்து அரிக்குதே

இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க
அந்த முரட்டுப் பயலும் வருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு
சேலை வாங்கித் தன் சொந்தச்சேலை தருவானே (2)
(சொட்டச் சொட்ட...)


உனக்காக உயிர் பூத்து நின்றேன்
உனக்காக கன்னி காத்து நின்றேன்
இன்னும் நானும் சிறுமிதான்
எப்போ தென்னைப் பெண் செய்குவாய்

உனக்காக உயிர் பூத்து நின்றேன்
உனக்காக காத்து காத்து நின்றேன்
இன்னும் நானும் சிறுமிதான்
எப்போ தென்னைப் பெண் செய்குவாய்

வந்து மூன்று முடிச்சு போடு
பின்பு முத்த முடிச்சு போடு
என்னை மொத்தமாக மூடு மூடு

நீ எனக்குள் புதையலெடுக்க
நானும் உனக்குள் புதையலெடுக்க
உயிரின் ஆழம் சென்று தேடு தேடு

இளமையின் தேவை எது எது என்று
அறிந்தோம் நீயல்லவா
இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம்
அன்பே நீ சொல்ல வா

(சொட்டச் சொட்ட...)
(நீயிங்கே நீயிங்கே...)