படம்: தாஜ் மஹால்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ்
வரிகள்: வைரமுத்து
அடி நீ எங்கே... அடி நீ எங்கே...
அடி நீ எங்கே...அடி நீ எங்கே...அடி நீ எங்கே
சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு
குடையொண்ணு குடையொண்ணு தா கிளியே
விட்டுவிட்டுத் துடிக்குது என் நெஞ்சு
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே
அடி நீ எங்கே...நீ எங்கே...
நீ எங்கே நீ எங்கே பூ வைத்த பூ எங்கே
மழைத் தண்ணி உசிரக் கரைக்குதே
உசிர் உள்ள ஒருத்திக்கு தாஜ் மஹாலக்
கட்டிக் கொடுத்தவனும் நாந்தாண்டீ
அடியே நீ எங்கே எங்கே நீ எங்கே கண்ணீரில மழையும் கரிக்குதே
அடியே நீ எங்கே எங்கே நீ எங்கே கண்ணீரில மழையும் கரிக்குதே
சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு
குடையொண்ணு குடையொண்ணு தா கிளியே
விட்டுவிட்டுத் துடிக்குது என் நெஞ்சு
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே
அடி நீ எங்கே...நீ எங்கே...நீ எங்கே...
உனக்காக பரிசு ஒன்று கொண்டேன்
எதற்காக நீ விலகி நின்றாய்
நான் மழையல்லவே ஏன் ஒதுங்கி நின்றாய் (2)
எனைக்கண்டு சென்ற கனவே
உயிரைத் துண்டு செய்த மலரே
வந்து மழையிலாடு மயிலே... மயிலே
உன் நாணம் என்ன கண்ணே
மேகம் அட்சதை போடும்போது
தலையை நீட்ட வேண்டும் கண்ணே... கண்ணே
நீருக்கும் நமக்கும் ஒரு தேவ பந்தம்
அன்பே உருவானது
நீருக்குள் முகம் பார்த்த ஜோடி ஒன்றை
மீண்டும் மழை சேர்த்தது
(சொட்டச் சொட்ட...)
அடியே நீ எங்கே எங்கே நீ எங்கே கண்ணீரில மழையும் கரிக்குதே (3)
நீ எங்கே...நீ எங்கே...நீ எங்கே...நீ எங்கே... (3)