Friday, September 11, 2009

ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே...


படம்: காதல்னா சும்மா இல்லை
இசை:
பாடியவர்கள்: சின்மை
வரிகள்:

ஆவாரம் பூ... அந்நாளில் இருந்தே
யாருக்குக் காத்திருக்கு
அந்திப் பகல்... மழை வெயில் சுமந்தே
உனக்காகப் பூத்திருக்கு...

சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா...

ஆவாரம் பூ... அந்நாளில் இருந்தே
யாருக்குக் காத்திருக்கு
அந்திப் பகல்... மழை வெயில் சுமந்தே
உனக்காகப் பூத்திருக்கு...


காற்றில் ஆடி தினந்தோறும்
உனது திசையை தொடருதடா
குழந்தைக் கால ஞாபகத்தில்
இதழ்கள் விரித்தே கிடக்குதடா
நெடு நாள்... அந்த நெருக்கம்...
நினைத்தே... அது கிடக்கும்...
சருகுகள் சத்தம் போடும்
தினம் சூழ்நிலை யுத்தம் போடும்
அதன் வார்த்தை எல்லாம் மெளனம் ஆகும்...

சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா...

ஆவாரம் பூ... அந்நாளில் இருந்தே
யாருக்குக் காத்திருக்கு
அந்திப் பகல்... மழை வெயில் சுமந்தே
உனக்காகப் பூத்திருக்கு...


ஆயுள் முழுதும் தவம் கிடந்தே
ஒற்றைக் காலில் நிற்குதடா
மாலை ஆகி தவழ்ந்திடவே
உனது மார்பை கேட்குதடா
பனியில்... அது கிடக்கும்...
நீயும் பார்த்தால்... உயிர் பிழைக்கும்...
வண்ணங்களெல்லாம் நீ தான்
அதன் வாசங்களெல்லாம் நீ தான்
நீ விட்டுச்சென்றால் பட்டுப்போகும்

சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா...

ஆவாரம் பூ... அந்நாளில் இருந்தே
யாருக்குக் காத்திருக்கு
அந்திப் பகல்... மழை வெயில் சுமந்தே
உனக்காகப் பூத்திருக்கு...