Wednesday, September 30, 2009

பழமுதிர்ச் சோலை...


படம்: வருஷம் 16
இசை: இளையராஜா
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ்
வரிகள்: வாலி

ஏ ஹே! ஹோ ஹோ! லாலலா!
ஏ ஹே! ஹோ ஹோ! லாலலா!
ஓ!....ஓ!

பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
நான்தான் அதன் ராகம் தாளமும்
கேட்டேன் தினம் காலை மாலையும் (2)
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்
(பழமுதிர்...)


தூரத்தில் போகின்ற மேகங்களே
தூறல்கள் போடுங்கள் பூமியிலே
வேர் கொண்ட பூஞ்சோலை
நீர் கொண்டு ஆட

ஏரியில் மீன்கொத்தும் நாரைகளே
சிறகுகள் எனக்கில்லை தாருங்களேன்
ஊர் விட்டு ஊர் சென்று
காவியம் பாட

பறவைகள் போல் நான் பறந்திட வேண்டும்
பனிமலை மேல் நான் மிதந்திட வேண்டும்
ஏதோ ஒரு போதை
மனம் கொண்டாடுதே!
(பழமுதிர்...)


பந்தங்கள் யாவும் தொடர்கதை போல்
நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்
நூலிழை போலிங்கு நெருங்கிய இதயங்கள்
பாலுடன் நெய்யெனக் கலந்திடும் நாள்

தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகள் மேவி
பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே
மண்ணில் இதைவிட சொர்க்கம் எங்கே

நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை - என்றும்
வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
இலக்கியம் போலெங்கள் குடும்பமும் விளங்க
இடைவிடாது மனமொரு மகிழ்ச்சியில் திளைத்திட
(பழமுதிர்...)