Wednesday, September 30, 2009

அடி ஆத்தாடி...


படம்: கடலோரக் கவிதைகள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, ஜானகி
வரிகள்: வைரமுத்து


அடி ஆத்தாடி...
அடி ஆத்தாடி...
இள மனசொன்னு ரெக்க கட்டிப் பறக்குது சரிதானா
அடி அம்மாடி...
ஒரு அலை வந்து மனசுல அடிக்குது அதுதானா

உயிரோடு
உறவாடும்
ஒரு கோடி ஆனந்தம்
இவன் மேகம் ஆக யாரோ காரணம்

ஆ... அடி ஆத்தாடி
இள மனசொன்னு ரெக்க கட்டிப் பறக்குது சரிதானா
அடி அம்மாடி...


மேல போகும் மேகம் எல்லாம்
கட்டுப்பட்டு ஆடாதோ
உன்னப் பாத்து அலைகள் எல்லாம்
மெட்டுக்கட்டி பாடாதோ

இப்படி நான் ஆனதில்லை
புத்தி மாறிப் போனதில்லை
முன்ன பின்ன நேர்ந்ததில்லை
மூக்கு நுனி வேர்த்ததில்லை

கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள
கத்திச்சண்டை கண்டாயோ
படபடக்கும் நெஞ்சுக்குள்ள
பட்டாம்பூச்சி பாத்தாயோ
இச கேட்டாயோ...
(அடி ஆத்தாடி...)


தாகப்பட்ட நெஞ்சுக்குள்ளா
ஏகப்பட்ட சந்தோசம்
உண்மை சொல்லு பொண்ணே
என்னை என்ன செய்ய உத்தேசம்

வார்த்தை ஒண்ணு வாய்வரைக்கும்
வந்து வந்து போவதென்ன
கட்டுமரம் பூப் பூக்க
ஆசைப்பட்டு ஆவதென்ன

கட்டுத்தறி காளை நானே
கன்னுக்குட்டி ஆனேனே
தொட்டுத்தொட்டு தென்றல் பேச
தூக்கங்கெட்டுப் போனேனே
சொல் பொன்மானே....
(அடி ஆத்தாடி...)