Thursday, September 10, 2009

ஒரு பார்வையில் பூக்கொடுத்தாய்...


படம்: சிவா மனசுல சக்தி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ரஞ்சித்
வரிகள்:

ஒரு பார்வையில் பூக்கொடுத்தாய்
ஒரு வார்த்தையில் வாழவைத்தாய்
ஒரு மேகத்தை போல் எந்தன்
தேகத்தை மாற்றிவிட்டாய்

சிறகைப் போலொரு
வேகத்தில் வேகத்தில்
வானத்தில் வானத்தில் செல்லுகின்றேன்
நிலவைப்போல் உனை தூரத்தில்
நிலவைப்போல் உனை தூரத்தில்
பார்க்கின்றபோதெல்லாம் துள்ளுகின்றேன்

நீ எனது உயிராக
நான் உனது உயிராக
ஓர் இரவு நெஞ்சத்தில்
தோன்றிடும் நேரம்

நீ காணும் கனவெல்லாம்
நான் காணும் கனவாகி
நாம் சேர்ந்து ஒன்றாக
பார்த்திட வேண்டும்

உயிரே... நீ பார்த்தாலே
உயிருக்குள் பூகம்பங்கள் தோன்றும்
உன்னால்... அடி உன்னாலே
உள்ளுக்குள்ளே என்னென்னவோ ஆகும்