படம்: பூவெல்லாம் கேட்டு பார்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஹரிஹரன், சாதனா சர்கம்
வரிகள்:
சுடிதார் அணிந்து வந்த சொர்கமே
என்மீது காதல் வந்தது
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா
நீ சொல்வாயா நீ சொல்வாயா
விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது
விரல் சேர்த்து கொஞ்சம் வந்தது
முழு காதல் என்று வந்தது தெரியாதே
அது தெரியாதே அது தெரியாதே
உன்மேல் நான் கொண்ட காதல்
என்மேல் நீ கொண்ட காதல்
எதை நீ உயர்வாக சொல்வாயோ
போட பொல்லாத பையா
நம்மேல் நாம் கொண்ட காதல்
அதை நீ ரெண்டாக பார்ப்பாயா
(சுடிதார் அணிந்து வந்த சொர்கமே...)
உன் பேரை சொன்னாலே நான் திரும்பிப் பார்கிறேன்
உன் பேரை மட்டும் தான் நான் விரும்பிக் கேட்கிறேன்
இருவர் ஒன்றாக இணைந்து விட்டோம் இரண்டு பெயர் ஏனடி
உனக்குள் நான் என்னைக் கழித்துவிட்டேன் உன்னையே கேளு நீ
அடி உன்னை நான் மறந்த வேளையில் உன் காதல் மாறுமா
விடி காலை தாமரை பூவிது விண்மீனை பார்க்குமா
(உன்மேல் நான் கொண்ட காதல்...)
பலகோடி பெண்களிலே எதற்கேன்னை தேடினாய்
நான் தேடும் பெண்ணாக நீ தானே தோன்றினாய்
நரை கூடும் நாட்களிலே என்னைக் கொஞ்சத் தோன்றுமா
அடி போடி காதலிலே நரை கூட தோன்றுமா
உன் கண்ணில் உண்டான காதலிது மூடிவிடும் என்னமோ
என் நெஞ்சில் உண்டான காதல் இது நெஞ்சை விட்டு போகுமோ
(உன்மேல் நான் கொண்ட காதல் )
(சுடிதார் அணிந்து வந்த சொர்கமே )