Thursday, September 10, 2009

வலியே; என் உயிர்வலியே...


படம்: தாம் தூம்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கிருஷ், பாம்பே ஜெயஸ்ரீ
வரிகள்:

வலியே; என் உயிர்வலியே
நீ உலவுகிறாய், என் விழி வழியே
சகியே; என் இளம் சகியே
உன் நினைவுகளால், நீ துரத்துறியே
மதியே; என் முழு மதியே
பெண் பகலிரவாய், நீ படுத்துறியே
நதியே; என் இளம் நதியே
உன் அலைகளினால், நீ உரசுறியே


யாரோ... மனதிலே ...
ஏனோ... கனவிலே...
நீயா... உயிரிலே....
தீயா... தெரியலே....

காற்று வந்து மூங்கில் என்னை
பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை
ஊமையாகின்றதோ

(வலியே...)


மனம் மனம் எங்கிலும் - ஏதோ
கனம் கனம் ஆனதே
தினம் தினம் ஞாபகம் - வந்து
ரணம் ரணம் தந்ததே
அலைகளின் ஓசையில்
கிளிஞ்சலாய் வாழ்கிறேன்
நீயோ...
முழுமையாய்
நானோ....
வெறுமையாய்
நாமோ...
இனி சேர்வோமா...

(யாரோ...)


மிக மிகக் கூர்மையாய்
என்னை ரசித்தது - உன்
கண்கள் தான்
மிருதுவாய்ப் பேசியே
என்னுள் வசித்தது - உன்
வார்த்தை தான்
கண்களைக் காணவே
இமைகளே மறுப்பதா

வெந்நீர் ....
வெண்ணிலா.....
கண்ணீர் ....
கண்ணிலா....
நானும் வெறும் கானலா....

(யாரோ...)

காற்று வந்து மூங்கில் என்னைப்
பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை
ஊமையாகின்றதோ

(வலியே...)
(வலியே...)