படம்: அழகே உன்னை ஆராதிக்கிறேன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வாலி
அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க
அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்
கண்ணே வா கரையேறி வா
கண்ணே வா கரையேறி வா
அம்மா தாயே வா... புண்ணியம்
(அபிஷேக நேரத்தில்...)
காணக் கண் கோடி போதாதடி
கன்னி நீராடினால்
காணக் கண் கோடி போதாதடி
கன்னி நீராடினால்
ஆடை வேண்டாமோ மறக்க, உடல் முழுக்க
அதைக் கேட்டால் கொடுப்பேன் நானே
வாடி யம்மா சக்கரக்கட்டி
புது வாசம் வீசும் சந்தனப்பெட்டி
உன் காதல் என்னும் மத்தளம் கொட்டி
நாம் கலந்தால் என்ன சித்திரக்குட்டி
(அபிஷேக நேரத்தில்...)
மேனி நோகாமல் மெல்லத் தொட்டு
மஞ்சள் தேய்க்கட்டுமா
மேனி நோகாமல் மெல்லத் தொட்டு
மஞ்சள் தேய்க்கட்டுமா
அதுக்கு இப்போது வசதி
அடி வசந்தி; துணை வருமோ இதுபோல் பொருந்தி
காதல் வந்து கெட்டது புத்தி
அட கவலை என்ன மத்ததப் பத்தி
கண்ணால் ரெண்டில் முத்திரை குத்தி
என்னைக் கொஞ்ச வேண்டும் கன்னி ஒருத்தி
(அபிஷேக நேரத்தில்...)