Wednesday, September 2, 2009

காதலின் தீபமொன்று...


படம்: தம்பிக்கு எந்த ஊரு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்பிரமணியம்
வரிகள்:

காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம்
மயக்கமென்ன? காதல் வாழ்க

காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்


நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை
நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை
அன்பிலே வாழும் நெஞ்சில்
அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆயிரம் பாடலே
ஒன்றுதான் எண்ணம் என்றால்
உறவு தான் ராகமே
எண்ணம் யாவும்
சொல்ல......வா

காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்


என்னை நான் தேடித் தேடி
உன்னிடம் கண்டு கொண்டேன்
என்னை நான் தேடித் தேடி
உன்னிடம் கண்டு கொண்டேன்
பொன்னிலே பூவை அள்ளும்
பொன்னிலே பூவை அள்ளும்
புன்னகை மின்னுதே
கண்ணிலே காந்தம் வைத்து
கவிதையைப் பாடுதே
அன்பே இன்பம்
சொல்ல......வா

காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம்
மயக்கமென்ன? காதல் வாழ்க

காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்